டிரம்ப்-புதின் சந்திப்பு! “இது போருக்கான காலம் அல்ல..” இந்தியா வரவேற்பு!
டெல்லி: உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்காவில் சந்தித்து பேச இருக்கின்றன. இதை இந்தியா வரவேற்றிருக்கிறது.
இந்த சந்திப்பை வரவேற்றிருக்கும் இந்தியா, இது போருக்கான காலம் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியிருக்கிறது. இந்த சந்திருப்பு உக்ரைன்-ரஷ்யா இடையே அமைதியை கொண்டு வரும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் விஷயத்தில்தான் இந்தியாவுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியிருந்தது. இந்நிலையில் அமெரிக்கா-ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவது பாசிட்டிவ் விஷயமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அடுத்த வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15 அன்று அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அறிவித்தார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பேச்சுவார்த்தையை இந்தியா வரவேற்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அலாஸ்காவில் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறவுள்ள சந்திப்பைப் பற்றி இந்தியா வரவேற்பதாக வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை குறிப்பிட்டது. "இந்தச் சந்திப்பு உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அமைதிக்கான வாய்ப்புகளைத் திறக்கும்" என்றும் அந்த அறிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி பலமுறை வலியுறுத்தியது போல, "இது போருக்கான காலம் அல்ல" என்பதையும் வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியது. இந்த அறிவிப்பை ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டார்.
இந்த சந்திப்பு, 2015-க்குப் பிறகு புதின் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும். அவர் கடைசியாக அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்திருந்தார். ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் இது குறித்து பதிவிட்டிருந்தார்.
"எதிர்பார்க்கப்பட்ட எனக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15 அன்று அலாஸ்கா மாகாணத்தில் நடைபெறும். மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்" என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications