தீவிரவாத கருத்து கொண்டவர்களை கேம்பில் அடைக்க வேண்டும்.. முப்படை தளபதி ராவத் பரபர யோசனை!
தீவிரவாத கருத்து மற்றும் கொள்கை கொண்டவர்களை முகாம்களில் அடைத்து மனதை மாற்ற வேண்டும் என்று முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லி: தீவிரவாத கருத்து மற்றும் கொள்கை கொண்டவர்களை முகாம்களில் அடைத்து மனதை மாற்ற வேண்டும் என்று முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துக்களை பேசும் சிறுவர்கள் உட்பட எல்லோரையும் முகாம்களில் அடைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் அதிகம் சக்தி வாய்ந்த பதவிகளில் மூன்றாவது பதவியாக இந்தியாவின் முப்படை தளபதி பதவி பார்க்கப்படுகிறது. இதற்கு முன் குடியரசுத் தலைவர்தான் முப்படைகளை கண்காணித்து வந்தார். தற்போது இதற்கு தனி தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் முப்படை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவப்படை தளபதியாக இருந்தவர், தற்போது முப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி விழா
இந்த நிலையில் இன்று டெல்லியில் நடந்த விழா ஒன்றில் பேசிய அவர், தீவிரவாத கருத்து மற்றும் கொள்கை கொண்டவர்களை முகாம்களில் அடைத்து மனதை மாற்ற வேண்டும். முக்கியமாக காஷ்மீர் இளைஞர்களை முகாம்களில் அடைக்க வேண்டும். பல நாடுகளில் இப்படி இருக்கிறது.இதுபோன்ற கருத்துக்களை பேசும் சிறுவர்கள் உட்பட எல்லோரையும் முகாம்களில் அடைக்க வேண்டும்.

அமெரிக்கா எப்படி
அமெரிக்காவிலும், பாகிஸ்தானிலும் கூட இப்படிபட்ட முகாம்கள் இருக்கிறது. இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முகாம்களில் வைத்து மனதை மாற்றலாம். ஆனால் மொத்தமாக இந்த கொள்கை கொண்டவர்களை மாற்றுவது கடினம்.

பாகிஸ்தான் எப்படி
பாகிஸ்தான் இதை முன்பே புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறது. அவர்கள் உருவாக்கிய, வளர்த்துவிட்ட தீவிரவாதம் இப்போது அவர்களேயே அச்சுறுத்துகிறது. அதை இப்போது தடுக்க கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

சமூக வலைத்தளம்
அதேபோல் சமூக வலைத்தளங்களில் தீவிரவாத கருத்து பேசுபவர்களை கண்டுபிடிக்க வேண்டும். நாம் சரியான நபர்களை கண்டுபிடித்து அவர்களை முகாமில் போட வேண்டும். இந்த பிரச்சனை மீது முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications