Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானுக்கு பரவிய பயம்.. இந்திய விமானப்படையில் புதிய ஆயுதம்! சட்டென சைலன்ட் ஆன சீனா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரேலின் 'லோரா' எனும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இந்தியா தனது சுகோய் Su-30MKI போர் விமானங்களில் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த முயற்சி வெற்றியடைந்தால், பக்கத்து நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா அச்சடையும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'முதலில் தாக்குதல்' என்பது ராணுவத்தில் மிக முக்கியம். முதல் தாக்குதல் எப்போதும் வெற்றிகரமானதாகவும், திரும்பி தாக்காத வகையிலும், பலமானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இஸ்ரேலின் லோரா பாலிஸ்டிக் எவுகனை இந்திய விமானப்படைக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

IAF Israel China

இந்த ஏவுகணை, எதிரிகளைத் தடுப்பது மட்டுமல்லாமல், அவர்கள் எதிர்வினை செய்யும் முன் அவர்களைத் தீர்க்கமாக முடக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சுகோய் ஜெட் விமானங்கள் தற்போது பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. அத்துடன் லோரா ஏவுகணைகளையும் இணைக்கும் பணியில் தற்போது இந்திய விமானப்படை தீவிரமாக இருக்கிறது.

இது சாத்தியமானால், இந்திய விமானப்படையில் சுகோய் விமானம், பிரமோஸ் ஏவுகணை மற்றும் லோரா ஏவுகணை ஆகியவை 'சூப்பர் ஸ்ட்ரைக் ட்ரையோ' ஆக இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 'சூப்பர் ஸ்ட்ரைக் ட்ரையோ' என்பது விளையாட்டு துறையில் பயன்படுத்தப்படும் சொல். ஒரு அணியில், திறமையான, ஆதிக்கம் நிறைந்த மூன்று வீரர்களை இவ்வாறு குறிப்பிடுவார்கள்.

அப்படி பார்க்கும்போது இந்திய விமானப்படையில் சுகோய் விமானம், பிரமோஸ் ஏவுகணை மற்றும் லோரா ஏவுகணை ஆகியவை ஒருங்கிணைந்த வேகமான, துல்லியமான மற்றும் ஆழமான ஊடுருவல் தாக்குதல்களைச் செய்யக்கூடியது.

LORA ஏவுகணை என்றால் என்ன?

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) மூலம் உருவாக்கப்பட்ட LORA ஏவுகணை, 400 முதல் 430 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இது 10 மீட்டருக்கும் குறைவான CEP (Circular Error Probability) கொண்டது. அதாவது இந்த ஏவுகணையை 100 முறை ஏவும்போது 50க்கும் அதிகமான முறை, இலக்கின் 10 மீ நெருக்கத்தில் தாக்கும். இது மிகவும் துல்லியமான தாக்குதலாகும். எனவே எதிரி பதுங்கு குழிகள், ஓடுபாதைகள் மற்றும் ராணுவ மையங்களைத் தாக்குவதற்கு இந்த ஏவுகணை ஏற்றதாக அமைகிறது.

இது செலவு குறைந்ததாக இருப்பது கூடுதல் சிறப்பாகும். இந்தியா தனது நிதிச்சுமையை அதிகரிக்காமல் தனது போர் திறனை மேம்படுத்த இது உதவுகிறது.

இந்திய விமானப்படை ஏற்கனவே சுகோய்-30MKIs இலிருந்து பிரம்மோஸ் ஏவுகணையை இயக்குகிறது. இது விமானப்படைக்கு ஒரு சக்திவாய்ந்த சூப்பர்சோனிக் ஆயுதத்தை அளித்துள்ளது. பிரம்மோஸ் ஏவுகணைகள், அதிகபட்சமாக 2.8 Mach வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் 290 முதல் 450 கிமீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. எதிரிகளின் ரேடார் நிலையங்கள், கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் முக்கியமான இராணுவ உள்கட்டமைப்புகளை நிமிடங்களில் அழிக்கும் திறன் கொண்டது.

பிரம்மோஸ் எல்லைக்கு அருகிலுள்ள இலக்குகளை சாதனை நேரத்தில் அழித்துவிடும். அதே நேரத்தில், LORA எதிரி நாட்டு எல்லைக்குள் ஆழமாக ஊடுருவ அனுமதிக்கிறது. அதாவது PoK முதல் திபெத் வரையிலும், கராச்சி முதல் சின்ஜியாங் வரையிலும் எந்த இந்திய வீரரும் எல்லை கடக்காமல் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+