விடுதலைப் புலிகள் மீதான தடை விலக்கப்படுமா? தீர்ப்பாயம் அமைத்தது மத்திய அரசு
டெல்லி: விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்க நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

இதனால் இலங்கையைச் சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கூட 5 ஆண்டுகளுக்கு விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான் தடையை நீடிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? அதற்கான காரணங்கள் ஏதும் உள்ளதா என்பதை தீர்மானிக்க ஒரு தீர்பாயத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையில் சட்ட விரோத தடுப்பு ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த அமைப்பு விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்து ஆராய உள்ளது.












Click it and Unblock the Notifications