படையப்பால ரஜினி செஞ்சதெல்லாம் ஜுஜுபி.. இந்த பாட்டி வீடியோவைப் பார்த்தா அசந்து போய்டுவீங்க!
நாகப் பாம்பை மூதாட்டி ஒருவர் கையில் பிடித்தப்படி நடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
டெல்லி: மூதாட்டி ஒருவர் நாகப் பாம்பை கையில் பிடித்து தூக்கி வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும் என ஒரு பழமொழி தமிழில் இருக்கிறது. அந்த அளவுக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடியவை கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகள்.
அதிலும் நல்லபாம்பு என்றால் கேட்கவே வேண்டாம். படம் எடுக்கும் நாகத்தை சாமியாக வழிபடுபடக்கூடியவர்கள் நம் மக்கள். நாகத்தை பார்த்தாலே பலருக்கு கைகால் எல்லாம் நடுநடுங்க ஆரம்பித்துவிடும்.
அடி பட்டாலும் பட்டது.. புகழ் ரம்யா பாண்டியனுக்கு உதவி செய்யறாராம்...!
தைரியமான மூதாட்டி
ஆனால் நம் செய்தியின் நாயகியான இந்த மூதாட்டிக்கோ நல்லப்பாம்பு எல்லாம் எறும்பு மாதிரி. 5 அடி நீள நல்லப்பாம்பை அசால்டாக பிடித்து தூக்கி அடித்துவிடுகிறார் இந்த பாட்டி. இவர் அநாயசமாக பாம்பு ஒன்றை கையில் பிடித்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
நல்லப்பாம்பை தூக்கியடிக்கும் பாட்டி
சம்பந்தப்பட்ட அந்த வீடியோவில், ஒரு நல்லபாம்பின் வாலைப் பிடித்து தரதரவென இழுத்து வருகிறார் அந்த பாட்டி. பாட்டியின் செயலால் மிரண்டு கிடக்கும் பாம்பு, எதிர்த்து தாக்க முடியாமல் பாட்டி இழுத்த இழுப்புக்கு செல்கிறது. சிறிது தூரம் பாம்பை இழுத்து செல்லும் பாட்டி. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் அதை ஒரு சுழட்டு சுழட்டி தூக்கி வீசுகிறார்.
வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா
பாட்டியின் இந்த பாம்பு வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், "பாம்பை கையாளும் முறை இதுவல்ல பாட்டிமா", என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாட்டிக்கு பாராட்டு
இந்த வீடியோவை அவர் வெளியிட்ட சிறிது நேரத்தில் சுமார் இரண்டு லட்சம் பேர் பார்த்து அதிர்ந்து போய்விட்டனர். பின்னே, நல்ல பாம்பை ஒரு பாட்டி இப்படி அசால்டாக பிடித்து சுழட்டி அடித்தால் அதிர்ச்சியாகாமல் என்ன செய்ய முடியும்? இருப்பினும் பாட்டியில் தைரியத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.