Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாஜகவுத்தான் ஓட்டு" நியூஸ் 18 கருத்துக் கணிப்பில் 85% பேர் கருத்து! காரணம் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என நியூஸ் 18 சிஎன்என் நடத்தி கருத்துக் கணிப்பில் கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடிக்காகவே பாஜகவுக்கு வாக்களிப்போம் என 85 சதவீதம் பேர் பதிலளித்துள்ளனர். இதன் முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

நியூஸ் 18 சிஎன்என் தேர்தலுக்கு முந்தைய ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. அந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகளில் பெரும்பாலானோர் பிரதமர் மோடியை ஆதரித்ததாகவே தெரிகிறது.

Lok Sabha Elections 2024 News18 Opinion Poll Survey says 85 will vote for BJP

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள், ஏன் வாக்களிப்பீர்கள், யார் சிறந்த தலைவர் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பெருவாரியான மக்கள் தங்கள் பதில்களை அளித்துள்ளனர். அவ்வாறு கேட்ட போது, யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு பலரும் ஆச்சரியப்படும் அளவுக்கு பதில் அளித்துள்ளனர்.

பாஜகவுக்குத்தான் ஓட்டு போடுவோம் என 85 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எதற்காக என கேட்டதற்கு பிரதமர் மோடிக்காகவே வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர். உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை கருத்தில் கொண்டுதானே வாக்களிப்பீர்கள் என கேட்டதற்கு எங்கள் தொகுதியில் யார் வேட்பாளராக இருந்தாலும் சரி நாங்கள் மோடிக்காக பாஜகவுக்குத்தான் வாக்களிப்போம் என்றனர்.

அது போல் யார் நேர்மையாளர் என கேட்டதற்கு 73 சதவீதம் பேர் பிரதமர் மோடிதான் தெரிவித்துள்ளனர். அதாவது ராகுலை விட பிரதமர் மோடிதான் நேர்மையாளர் என கருத்து கணிப்புகளின் முடிவுகள் வந்துள்ளன. ராகுல் காந்தியை விட பிரதமர் மோடி கடின உழைப்பாளி என 69 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

பீகார் லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 38 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெல்லும் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும். இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பிரதமர் மோடியும் ஆட்சியை பிடிக்க ராகுல் காந்தியும் போராடி வருகிறார்கள்.

இந்த கருத்துக் கணிப்புகள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாவதற்கு முன்பு எடுக்கப்பட்டிருக்கலாம். தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன. எனவே இந்த சட்டத்தால் தேர்தல் முடிவுகளில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+