பிரதமருக்கு மட்டுமே ஸ்பெஷல் பாதுகாப்பு.. லோக்சபாவில் தாக்கலானது எஸ்பிஜி சட்ட திருத்த மசோதா
டெல்லி: லோக்சபாவில் பிரதமருக்கு மட்டும் எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதா இன்று லோக்சபாவில் நிறைவேறியுள்ளது.
இன்று லோக்சபாவில் பிரதமருக்கு மட்டும் எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தார்.

சோனியா காந்தி போன்ற உயர் மட்ட தலைவர்களின் குடும்பத்தின் எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ள போதிலும் அதற்கு பதிலாக சிஆர்பிஎஃப் வீரர்களின் 'இசட்-பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்படும் என்று திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்வான விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், பழிவாங்கும் அணுகுமுறையுடன் பாஜக எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வது இல்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அமித்ஷா கூறுகையில், :"சோனியா காந்தி குடும்பத்தினரிடமிருந்து பாதுகாப்பைத் திரும்பப் பெறுவதற்காக எஸ்பிஜி சட்டம் திருத்தப்பட்டுள்ளது என்ற எண்ணம் உருவாகி வருகிறது. சோனியா காந்தி குடும்பத்தின் பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை, ஆனால் நாடு முழுவதும் வழங்கப்படும் முன்கூட்டிய பாதுகாப்பு தொடர்பு மற்றும் ஆம்புலன்ஸ் வசதியுடன் 'இசட்-பிளஸ்' பாதுகாப்புக்கு மாற்றப்பட்டுள்ளது, " என்ற அமித்ஷா விவாதத்தின் போது தெரிவித்தார்
முன்னாள் பிரதமர்கள் சந்திர சேகர், ஐ.கே. குஜ்ரால் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரிடமிருந்து எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டபோது, யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். எனினும் உறுப்பினர்களின் போதிய ஆதரவுடன் எஸ்பிஜி பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேறியது.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications