"நிம்மதி.." வடமாநிலங்களை ஸ்தம்பிக்க வைத்த லாரி ஓட்டுநர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்! என்ன நடந்தது
டெல்லி: வடமாநிலங்களில் ஹிட் அண்ட் ரன் சட்டத்திற்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக லாரி ஓட்டுநர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிவில் கேஸ்களுக்கு பொது சிவில் சட்டம் என நாம் வலியுறுத்துகிறோம். அதேநேரம் கிரிமினல் வழக்குகளுக்கு நமது நாட்டில் எப்போதும் ஒரே சட்டம் தான் இருந்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை அடிப்படையில் தான் கிரிமினல் வழக்குகள் கையாளப்பட்டு வந்தது. இருப்பினும், இது ஆங்கிலேயர்கள் காலனித்துவ ஆட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி புதிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த புதிய சட்டத்தில் இடம்பெற்ற ஒரு சட்டம் இப்போது போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது. புதிய விதியின்படி ‛ஹிட் அன்ட் ரன்' அதாவது விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகன டிரைவருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூ.7 லட்சம் அபராதம் விதிக்க முடியும். ஐபிசி சட்டத்தில் இதற்கு2 ஆண்டு வரை மட்டுமே சிறைத் தண்டனை விதிக்க முடியும். ஆனால் இப்போது அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.
மத்தி. அரசு ஓட்டுநர்கள் தரப்பில் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டனர் என்பதே இதை எதிர்க்க முக்கிய காரணமாக இருந்தது. மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக்கூறி லாரி டிரைவர்கள் நாடு முழுவதும் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர்.
வடமாநிலங்களில் இன்று இந்த போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்றது. இதன் காரணமாக வடமாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. லாரிகளில் தான் பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லப்படும் என்பதால் எங்கே பெட்ரோல், டீசல் சப்ளை பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் பெட்ரோல், டீசலை நிரப்ப பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர். இதனால் வடமாநிலங்களில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு அதிகாரிகள் லாரி ஓட்டுநர்கள் தரப்பினருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். டெல்லியில் இன்று இரவு 7 மணிக்குத் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சில மணி நேரம் வரை நீட்டித்தது. இதற்கிடையே வடமாநிலங்களில் நடந்து வந்த லாரி ஓட்டுநர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர்கள் விரைவில் பணிக்குத் திரும்ப உள்ளனர். 10 ஆண்டு தண்டனை வழங்கும் பிரிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு உறுதி அளித்தாகவும் அதன் பிறகே தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக லாரி ஓட்டுநர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ஏலே பேதில போவ.. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398! இலங்கை மேல் விழுந்த இடி.. அடியை தாங்குவாரா அனுரகுமார! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர்












Click it and Unblock the Notifications