மகாராஷ்டிராவில் திடீர் வேகம்.. இரண்டாவது அலை என மத்திய அரசு எச்சரிக்கை.. அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
டெல்லி: மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா பரவலின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் கொரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வந்தது. இருப்பினும், கடந்த ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட நாட்டின் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இது குறித்து ஆராய மத்திய அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. இருப்பினும், கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.
குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக திரையரங்ககுகள் மற்றும் மால்களில் 50% மட்டும் அனுமதி என பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்து வருகிறது.

5 மாநிலங்கள்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் திடீரென்று அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத். கர்நாடகா ஆகிய நாடுகளில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது, மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

5 மாநிலங்கள்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் திடீரென்று அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத். கர்நாடகா ஆகிய நாடுகளில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது, மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

18 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு
அதிலும் குறிப்பாக, மகாராஷ்டிராவில் இந்தாண்டிலேயே இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 17,864 பேருக்கு கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக ஆக்டிவ் கேஸ்களை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.

18 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு
அதிலும் குறிப்பாக, மகாராஷ்டிராவில் இந்தாண்டிலேயே இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 17,864 பேருக்கு கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக ஆக்டிவ் கேஸ்களை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.

கொரோனா உயிரிழப்பு
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 87 பேர் மகாராஷ்டிராவில் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தற்போது அங்கு 13 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா உயிரிழப்பு
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 87 பேர் மகாராஷ்டிராவில் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தற்போது அங்கு 13 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது இதன் காரணமாக திரையரங்ககுகள் மற்றும் மால்களில் 50% மட்டும் அனுமதி என பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்து வருகிறது. மேலும், மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்,

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது இதன் காரணமாக திரையரங்ககுகள் மற்றும் மால்களில் 50% மட்டும் அனுமதி என பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்து வருகிறது. மேலும், மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்,












Click it and Unblock the Notifications