செல்போன் வாங்க பிளான் வச்சிருக்கீங்களா.. விலை கூடப்போகுது.. பட்ஜெட் அறிவிப்பை பாருங்க
டெல்லி: மொபைல் போன்கள் மற்றும் சார்ஜர்கள் மீது, இறக்குமதி வரியை விதிக்க பட்ஜெட்டில் அரசு முன்மொழிந்துள்ளது. எனவே இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள், சார்ஜர்கள் விலை அதிகரிக்கும்.
அதேநேரம், உள்ளூர் தயாரிப்பு என்றால், விலையில் உயர்வு இருக்காது.
"அதிக உள்நாட்டு உற்பத்தியை தூண்டுவதற்காக, இறக்குமதி செய்யப்படும் சார்ஜர்கள் மற்றும் மொபைல்கள் மற்றும் துணைப் பொருட்களுக்கான வரி விலக்கை வாபஸ் பெறுகிறோம். வரி ஏற்றம் 2.5 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கும்" என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
மெரினாவில் வைத்து சீர்காழி கொள்ளையர்கள் கைகளை துண்டு துண்டாக வெட்டணும்.. குமரி இளைஞரின் வன்ம பேச்சு
மதர்போர்டு, கேமரா மாடுல், கனெக்டர்கள், லித்தியம் இயான் பேட்டரி துணை பகுதிகள் மற்றும் பேட்டரி பேக் போன்றவற்றின் மீது 2.5 சதவீதம் கலால் வரி விதிக்கப்படுகிறது. இவை பிப்ரவரி 2ம் தேதி முதல் அமலுக்கு வரும். செல்போன்கள் மீதான விலையேற்றம், ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.