இந்தியாவில் உலக அழகி போட்டி.. அதுவும் 27 ஆண்டுகளுக்கு பிறகு.! இந்தியா சார்பில் பங்கேற்பது யார்
டெல்லி: 2023ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அழகி போட்டி மீண்டும் இந்தியாவில் நடக்க உள்ளது.
உலகெங்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 71ஆவது உலக அழகி போட்டி இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த நாடு இந்தப் போட்டியை நடத்தும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்தச் சூழலில் உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நவ. மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எந்த தேதிகள் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்தியா கடைசியாக 1996 ஆம் ஆண்டு உலக அழகி போட்டியை நடத்தியது. இது குறித்து மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலியா மோர்லி கூறுகையில், "71ஆவது உலக அழகி இறுதிப் போட்டியை இந்தியா நடத்தும் என அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்... தனித்துவமான கலாச்சாரம், அழகிய இந்திய நகரங்களையும் காண நாங்கள் காத்திருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
130 நாடுகளில் இருந்து அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். சுமார் ஒரு மாத காலம் நடக்கும் இந்தப் போட்டியில் இந்தியாவில் பல நகரங்களில் போட்டியாளர்களின் திறமை வெளிக் கொண்டு வரும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தற்போதைய உலக அழகியாக உள்ள போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா இப்போது இந்தியாவில் உலக அழகுப் போட்டி குறித்த விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா, "உலக அழகிக்கு நிகரான மதிப்புகளைக் கொண்ட இந்த அழகான நாட்டில் (இந்தியா) தனது கிரீடத்தை ஒப்படைப்பதில் மகிழ்ச்சி.. உபசரிப்பில் இந்தியாவைப் போல ஒரு நாட்டை பார்க்க முடியது.. இங்கு வந்தால் தாய் வீட்டிற்கு வந்தது போல உணர்வீர்கள்.. பன்முகத்தன்மை, ஒற்றுமை, மரியாதை, அன்பு என இங்கிருந்து பலவற்றை கற்றுக் கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இந்தியாவில் இருந்து தற்போதைய மிஸ் இந்தியா வோல்ட் சீனி ஷெட்டி கலந்து கொள்ள உள்ளார். இந்தப் போட்டி இந்தியாவிலேயே நடைபெறுவது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகச் சீனி ஷெட்டி தெரிவித்துள்ளார்.
உலக அழகி பட்டத்தை இதுவரை 6 முறையை இந்தியா வென்றுள்ளது. ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகே (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியர்கள் ஆவர்.
-
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications