டிரைவர்களுக்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள சூப்பர் ஆப்.. நீண்ட தூரம் போறவங்களுக்கு வரப்பிரசாதம்
டெல்லி: நீண்ட தூரம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, அவசர உதவிகள் தேவைப்படும் போது, எளிதில் தொடர்பு கொள்வதற்காக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 'ராஜ்மார்க் யாத்ரா' என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடி உள்பட பல்வேறு விவரங்களை அறிய முடியும். இந்த ஆப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் நெடுதூரம் பயணிப்பவர்கள் என்றால் அது டிரைவர்கள் தான். அவர்களுக்கான அடிப்படை தேவைகள், வசதிகள் போன்றவை குறித்து சரியான தகவல்கள் கிடைக்காமல் அவதிப்படும் நிலைஉள்ளது. குறிப்பாக மொழி பிரச்சனை காரணமாக டிரைவர்கள் அவஸ்தை படும் நிலையும் இருக்கிறது.

பொதுவாக நேஷனல் பெர்மிட் லாரிகளில் செல்வோர், தங்கள் பயணம் மூலம் பல்வேறு மொழிகளை பேச கற்றுக்கொள்வார்கள். ஆனால் எழுத்துக்களை படிப்பது மிகவும் கடினம். அவர்கள் எங்கே போகிறார்களோ, அந்த பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள்பெற வேண்டும் என்பதற்காக தேசிய நெடுஞ்சாலை 'ராஜ்மார்க் யாத்ரா' என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஆப்பில் உங்கள் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, ஓடிபி கொடுத்து, இ-மெயில் ஐ.டி, இருப்பிடம், வாகன விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்து கொண்டால் நீங்கள் செல்லும் சாலையின் வகை, விபரம், பயணிக்கும் தூரத்தில் உள்ள சுங்கச்சாவடி, அதன் கட்டண விபரம், ஒப்பந்த நிறுவனம் மற்றும் அவர்களது தொலைபேசி எண் ஆகியவற்றை அறியலாம். இதேபோல் டிரைவர்கள் 'ராஜ்மார்க் யாத்ரா' ஆப்பில் மருத்துவமனை, பெட்ரோல் பங்க், குறிப்பிடத்தக்க இடங்கள் குறித்த விபரத்தை அறிந்து கொள்ள முடியும்.
மேலும் தேசிய நெடுஞ்சாலை திட்ட அதிகாரி பெயர் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை அறிய முடியும். மேலும் பயணிக்கும் வழியில் உள்ள வானிலை நிலவரங்களை நிச்சயம் தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த ஆப்பில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் வசதி மற்றும் பயண அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்ய முடியும்.
அதே நேரம் விதிமுறை மீறி வாகன ஓட்டிகள் பயணித்தால், ஜி.பி.எஸ்., வாயிலாக கண்காணிக்கப்பட்டு டிரைவர்களுக்கு எச்சரிக்கையும் சிக்னல்களும் அனுப்பி வைக்கப்படும்.நீண்ட தூரம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, அவசர உதவிகள் தேவைப்படும் போது, எளிதில் தொடர்பு கொள்வதற்காகவே இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், தேவைப்பட்டால் இந்த ஆப்பின் வாயிலாக நெடுஞ்சாலை ஆணைய அவசர கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளவும் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications