நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன்.. அமித்ஷாவுக்கு ரத்த கடிதம் எழுதிய விளையாட்டு வீராங்கனை
டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை மேற்கொள்ள தனக்கு அனுமதி அளிக்க கோரி இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் அனுப்பி உள்ளார்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற பெண் ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார்.
நிர்பயா பாலியல் பலாத்கார படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.குற்றவாளிகளை தூக்கிலட வேண்டும் என்றும் அவர்களை கொல்ல வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

உச்ச நீதிமன்றம் உறுதி
நிர்பயா வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகள் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன.

7 ஆண்டுகள் ஆகிவிட்டது
ஆனால் நிர்பயா இறந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை குற்றவாளிகள் 4பேரும் தூக்கிலப்படவில்லை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனு, உச்ச நீதிமன்றத்துக்கு சீராய்வு மனு உள்ளிட்ட காரணங்களால் தூக்கிலிடும் பணி இன்னமும் நடைபெறவில்லை.

குற்றவாளிகள் என்கவுண்ட்டர்
இதற்கிடையே ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4பேரும் 10 நாளில் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டனர். இதேபோல் நிர்பயா வழக்கு குற்றவாளிகளும் உடனே தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
|
வர்த்திகா சிங்
இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை மேற்கொள்ள அனுமதி கோரி இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications