நிர்பயா வழக்கு.. குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல்
டெல்லி: நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், குற்றவாளிகளுக்கான தூக்கு விவகாரத்தில், மத்திய அரசு தொடர்ந்த வழக்கை மார்ச் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது, உச்சநீதிமன்றம்.
நிர்பயா வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளையும் ஒன்றாக தூக்கிலிட வேண்டும் என்று பிப்ரவரி 5ம் தேதி டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், குற்றவாளிகள் ஒவ்வொருவரும், ஏதாவது காரணத்தை சொல்லி, மரண தண்டனையை தள்ளிப்போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நான்கு குற்றவாளிகளையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என்று, மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இதை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று, நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் நவின் சின்ஹா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் வந்தது.
இந்த வழக்கை மார்ச் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. ஆனால், ஏற்கனவே, 4 குற்றவாளிகளுக்கும், மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கோர்ட் வாரண்ட் பிறப்பித்திருந்தது. எனவே, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது சந்தேகம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications