ஆபரேஷன் கங்கா.. மீட்பு பணியில் களமிறங்கிய இந்திய விமானப்படை - பிரதமர் மோடி உத்தரவு!
டெல்லி: உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிக்காக இந்திய விமானப்படையை அழைத்திருக்கிறார் பிரதமர் மோடி.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளார்கள். அவர்களை மீட்க 'ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட இந்திய விமானப்படையை அழைத்திருக்கிறது மத்திய அரசு. விரைவில் விமானப்படை விமானங்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடும்.
இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.
உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ருமேனியாவின் புகாரெஸ்டில் இருந்து 182 இந்தியர்களுடன் புறப்பட்ட 7-வது விமானம் இன்று காலை மும்பை வந்தடைந்தது. அதேபோல் 8 வது விமானமும் தற்போது இந்தியா வந்துள்ளது. விரைவில் 9வது விமானம் உக்ரைனில் சிக்கி இருந்த இந்தியர்களை மீட்டு இந்தியா திரும்பும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்லார்.
இந்நிலையில், உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. இந்நிலையில், இந்திய விமானப்படையை மீட்புப் பணிக்கு அழைத்திருக்கிறார் பிரதமர் மோடி.
இந்திய விமானப்படையில் உள்ள சி-17 என்ற அதிவேக விமானத்தை இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். இதனால் இந்தியர்களை விரைவாகவும் பத்திரமாகவும் மீட்க முடியும் என்று தெரிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications