வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விபூஷன் விருதகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, தமிழகத்தை சேர்ந்த பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகவும் உயரிய விருதாக பத்ம விருதுகள் உள்ளன. பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

குடியரசு தினத்தை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பத்ம ஸ்ரீ விருதுகள் மொத்தம் 34 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்ரப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் பத்ம பூஷன் விருது மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்குள் அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி பாத்திமா பீவி (மறைவுக்கு பின்), நடிகர் மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பத்ம விபூஷன் விருதகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்தை சேர்ந்த பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்திற்கும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விஜயந்திமாலா பாலி, பிந்தேஸ்வர் பதாக் (மறைவுக்கு பின்) ஆகியோருக்கும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications