நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கியது.. அஜெண்டா என்ன? என கேட்டு "இந்தியா" எம்பிக்கள் முழக்கம்
டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று பழைய கட்டடத்திலேயே தொடங்கியது. இந்த கூட்டம் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் வரும் 18ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த கூட்டத்தில் சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என்பதால் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நாடாளுமன்ற செய்தி இதழில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் வரை இந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவும் இன்று தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.
சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாள் நாடாளுமன்றத்தின் பழைய கட்டடத்திலும், எஞ்சிய 4 நாள் கூட்டங்கள் புதிய கட்டடத்திலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்றைய தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நாளை (இன்று) குழு புகைப்படம் எடுக்கப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து அனைவரும் புதிய கட்டடத்திற்கு செல்வோம் என்றும் அவர் கூறியிருந்தார். இன்றைய தினம் இந்த கூட்டத் தொடரில் சனாதனம், பாரத், "இந்தியா" கூட்டணி, நீட் தேர்வு, காவிரி விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்டவைகளை எழுப்ப எதிர்க்கட்சி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்த கூட்டத் தொடரில் வழக்கறிஞர்கள் மசோதா, தபால் நிலைய மசோதா 2023 உள்ளிட்டவை நிறைவேற்றப்படும் என்றும் தெரிகிறது.
முதல் நாள் கூட்டம் பழைய கட்டடத்தில் தொடங்கியது. அதில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. சிறப்பு கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் என்ன என கேட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications