சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெட்ரோல், டீசல் மீதான வாி உயர்வு.. பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்லி: எரிபொருள் மீதான செஸ் வரி அதிகரிக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், எரிபொருள் மீதான கலால் வரியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீதான வரி அதிகரிக்கப்படுவதாக கூறினார் . ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தலா ரூ.1 கலால் வரி அதிகரிக்கப்படுவதாக கூறினார்.
சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை தலா 1 ரூபாய் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
எரிபொருள் மீதான கலால் வரியை உயர்த்தி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி கோஷங்களை எழுப்பினர்.
மத்திய அரசின் எரிபொருள் மீதான வரி உயர்வு அறிவிப்பால் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications