முக்கியமான திருப்புமுனை... தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்குப் பிரதமர் வாழ்த்து
டெல்லி: ஆக்ஸ்போர்ட் மற்றும் பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
Recommended Video

இந்தியாவிலும் விரைவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றவாறு தடுப்பூசி ஒத்திகை நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.

நிபுணர் குழு பரிந்துரை
இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதியளிக்க கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய சிறப்பு நிபுணர் குழு பரிந்துரைத்திருந்தது. அதேபோல ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கும் மத்திய அரசு அனுமதியளிக்கலாம் என்று இந்திய சிறப்பு நிபுணர் குழு நேற்று பரிந்துரைத்தது.

தடுப்பூசிக்கு அனுமதி
அதைத்தொடர்ந்து இன்று இவ்விரு கொரோனா தடுப்பூசிகளின் அவரசகால பயன்பாட்டிற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இன்பு அனுமதி அளித்து. அதன்படி இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் இன்னும் சில நாள்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி வாழ்த்து
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதற்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி தனது ட்விட்டரில், "கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய திருப்புமுனை! கொரோனா இல்லாத ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கும் பாதையைத் துரிதப்படுத்தும் விதமாக சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிக்கு இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. வாழ்த்துகள் இந்தியா. கடினமாக உழைக்கும் நமது விஞ்ஞானிகளுக்கும் கண்டுபிடிப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.

ஒவ்வொரு இந்தியருக்கும் பெரும்
அவசரக்கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை! தற்சார்பு இந்தியா என்ற கனவை நிறைவேற்ற துடிக்கும் நமது விஞ்ஞான சமூகத்தின் ஆர்வத்தையே இது காட்டுகிறது. நமது டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள், விஞ்ஞானிகள், போலீசார், துப்புரவுப் பணியாளர்கள் என கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அனைவருக்கும் நன்றி. பல உயிர்களைக் காப்பாற்றிய அவர்களுக்கு நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்றார்

கோவிஷீல்ட்
ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்தை கோவிஷீல்ட் என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்குத் தேவையான ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யவும் விநியோகிக்கவும் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.03 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணிகள் தொடங்கும்போது, நாட்டில் கொரோனா பரவல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications