இந்தியாவின் வளர்ச்சியை பாருங்கள்.. பாஜக ஆட்சியை புகழ்ந்த ராஷ்மிகா.. உடனே மோடி கொடுத்த ரியாக்ஷன்
டெல்லி: நாட்டின் உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளது. இந்த வளர்ச்சியானது இதோடு நின்று போய்விடக்கூடாது. நாட்டின் வளர்ச்சிக்காக வாக்களியுங்கள். இந்தியா ஸ்மார்ட்டான நாடு.. என்று மோடியின் 10 ஆண்டு ஆட்சியை நடிகை ராஷ்மிகா மந்தனா பாராட்டிய நிலையில், அவருக்கு பிரதமர் மோடி பதில் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் வாரிசு, தெலுங்கில் கீதா கோவிந்தம், புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா அண்மையில் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா பேட்டி: அதில், நாட்டிலேயே மிகப்பெரிய கடல் பலமான மும்பை - நவி மும்பையை இணைக்கும் அடல் சேது பாலத்தை பற்றி பேசியிருந்தார். மேலும் இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வகையில் இருப்பதாகவும் ராஷ்மிகா மந்தனா கூறினார். இது தொடர்பாக பேட்டி அளித்து இருந்த ராஷ்மிகா மந்தனா கூறியதாவது: -
முடியாது என்று யாரும் சொல்ல முடியாது: மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக 'அடல் சேது' பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம் இரண்டு மணி நேர பயணம் 20 நிமிட பயணமாக மாறியுள்ளது.
இத்தகைய உள்கட்டமைப்பு வசதிகளால்தான் எளிதில் நம்மால் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இது பெருமை அளிக்கும் விஷயமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா கண்டிருக்கும் வளர்ச்சியைப் பாருங்கள். இந்தியாவால் இது முடியாது என்று யாராலும் இனி சொல்ல முடியாது. நாடு அனைத்து துறையிலும் வேகமாக வளர்ச்சி அடைகிறது.
பிரதமர் மோடி பதில்: நாட்டின் உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளது. இந்த வளர்ச்சியானது இதோடு நின்று போய்விடக்கூடாது. நாட்டின் வளர்ச்சிக்காக வாக்களியுங்கள். இந்தியா ஸ்மார்ட்டான நாடு.. " என்று பேசியிருந்தர். இந்த பேட்டியின் முன்னோட்டம் ஒன்றையும் ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
அடல் சேது பாலத்தில் இருந்து ராஷ்மிகா பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ராஷ்மிகா மந்தனாவின் இந்த பதிவு பற்றி ரியாக்ட் செய்துள்ள பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- "நிச்சயமாக.. மக்களை இணைப்பதையும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் விட திருப்திகரமானது எதுவும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
அடல் சேது பாலம்: மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் விதமாக அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட கடல் பாலம் கட்டப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கிய நிலையில், கடந்த ஜனவரி மாதம் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது.
ரூ.17,843 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் இந்த பாலம் முடிவடைகிறது. இந்த பாலத்தில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல அனுமதி கிடையாது.












Click it and Unblock the Notifications