செப்.3ல் தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.. பின்னணியில் உள்ள காரணம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: செப்டம்பர் 3ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தமிழ்நாடு வரவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் நாடு முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா செப்.3ஆம் தேதி நடக்கவுள்ளது.

Droupadi Murmu Tamilnadu President

இந்த விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வர உள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி திருவாரூர் முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட உள்ளது. கடந்த முறை 4 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த திரெளபதி முர்மு, குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதனால் திரெளபதி முர்முவின் இந்த பயணத்தின் வேறு என்ன திட்டங்கள் இருக்கும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+