டெல்லி சாலையை மறித்த சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள்.. ஜாப்ராபாத் மெட்ரோ நிலையம் மூடல்
டெல்லி: டெல்லி சாலையை சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வழி மறித்து கொண்டு போராடி வரும் நிலையில் ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் ஷாகீன்பாக், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஷாகீன்பாக் பகுதியில் பெண்கள், குழந்தைகள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜாப்ராபாத் மெட்ரோ பகுதியில் மேலும் ஒரு போராட்டத்தை பெண்கள், குழந்தைகள் தொடங்கியுள்ளனர். நேற்று இரவு முதல் அந்த பகுதியில் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம்
மத்திய அரசுக்கு எதிராகவும் சிஏஏவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியும் மூவர்ணக் கொடியை ஏந்தியும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மவுஜ்பூர் மற்றும் யமுனா விஹாரையும் இணைக்கும் சீலம்பூர் சாலையை மறித்து போராட்டம் செய்து வருகிறார்கள். நேற்று இரவு தொடங்கிய இந்த போராட்டம் இன்று காலையும் தொடர்ந்தது.
|
ரயில் நிலையம்
மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றி அதிகளவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில்வே ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ஜாப்ராபாத் ரயில் நிலையத்திற்கான நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் வாயில் மூடப்பட்டுள்ளன. எனவே இந்த ரயில் நிலையத்தில் எந்த ரயில் நிற்காது என்றனர்.

இடஒதுக்கீடு
இதுகுறித்து போராட்டக் களத்தில் இருந்த பெண் கூறுகையில் டெல்லியில் போராட்டம் நடந்து வரும் நிலையில் சிஏஏ இதுவரை திரும்ப பெறவில்லை. எனவே போராட்டக்காரர்களும் இடத்தை விட்டு நகரவில்லை. இந்த போராட்டம் சிஏஏ, என்ஆர்சியை எதிர்த்து நடத்தப்படுகிறது. அத்துடன் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டும் போராடுகிறோம்.

நொய்டா சாலை
இந்த போராட்டங்கள் ஆரம்பத்தில் பெண்களால் துவங்கப்பட்டது என்றாலும் அதற்கு காரணம் ஆண்களின் ஆதரவுதான். போராட்டம் நடத்த நாங்கள் சாலையை மறித்துள்ளோம். இந்த கொடூரமான சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்றார். டெல்லி- நொய்டா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஷாகீன்பாக் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் நடந்து வரும் நிலையில் மற்றொரு போராட்டத்தால் டெல்லி ஸ்தம்பித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications