Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லை தாண்டி வந்தோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தர வேண்டுமா? ரோஹிங்கியா அகதி வழக்கில் உச்சநீதிமன்றம் சாடல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாயமான 5 ரோஹிங்கியா அகதிகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‛‛சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவோருக்கு அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட சலுகைகளை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். எல்லை தாண்டி வந்தோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்க வேண்டுமா? இங்கும் ஏழைகள் உள்ளனர். அவர்களுக்கான சலுகைகளை இங்குள்ள மக்கள் அனுபவிக்க உரிமை உள்ளது'' எனக்கூறி கடுமையாக விமர்சனம் செய்தார்.

மியான்மரை ரோஹிங்கியா எனும் இஸ்லாமிய சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். மியான்மரில் அனுபவித்த துன்பத்தால் அவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். குறிப்பாக வங்கதேசம் மற்றும் நம் நாட்டில் அகதிகளாக உள்ளனர். நம் நாட்டுக்குள் பலரும் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.

rohingya-refugees-case-you-want-us-to-roll-out-a-red-carpet-for-intruder-asks-supreme-court

இருப்பினும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் 5 ரோஹிங்கியா அகதிகள் திடீரென்று மாயமாகி உள்ளனர். இவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடுமையாக கடிந்து கொண்டார். இதுதொடர்பாக அவர், ‛‛ரோஹிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வருகின்றனர். எல்லையில் உள்ள சுரங்கம் வழியாகவும், வேலிகளை வெட்டியும் உள்ளே வருகின்றனர்.

ஐந்து ரோஹிங்கியா அகதிகளைக் கண்காணிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது, "ஒரு ஊடுருவல்காரர் சட்டத்தின் கீழ் பிடிபட்டால், அவர்களுக்கு நாங்கள் சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டுமா?" என்று கேட்டது.

ஐந்து ரோஹிங்கியா ஊடுருவல்காரர்களுக்கு எதிராக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த மனுதாரர்கள் மீது செவ்வாயன்று உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க முடியாது என்று கூறியது.

இப்படி நுழைவோருக்கு அனைத்து உரிமைகளும் தர வேண்டுமா? உணவு, அவர்களின் குழந்தைகளுக்கு அனைத்து உரிமைகளும் வேண்டும் என்று சொல்கிறீர்கள். இந்த நாட்டில் ஏழை மக்களும் உள்ளனர். அவர்களுக்கு அத்தகை சலுகைகளை அனுபவிக்க உரிமைகள் இல்லையா? அவர்களுக்கு பதில் மற்றவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டுமா?. அகதிகள் என்பது சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட சொல். ஆனால் எந்த அடிப்படையில் ஒருவரை அதிகள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சொல்கிறது?'' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மனுதாரர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜே ஜோ ஆண்டன் பென்னோ, ‛‛நாங்கள் அகதிகளை நாடு கடத்தும் நடவடிக்கையை ஒருபோதும் எதிர்க்கவில்லை. இங்கு பிரச்சனை என்னவென்றால் மாயமானவர்கள் காவலில் இருக்கும்போது மிஸ்ஸாகி உள்ளனர். அவர்கள் எங்கு இருந்தனர்? இப்போது எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. இங்கு பிரச்சனை என்பது அவர்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பது இல்லை. அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லை என்பது தான் நாங்கள் கூறுகிறோம்'' என்றார்.

இதற்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‛‛அந்த குறிப்பிட்ட மக்களுக்கு இங்கு சட்டப்பூர்வமான அந்தஸ் இல்லை. வடகிழக்கு மாநிலங்கள் என்பது மிகவும் சென்டிட்டவான ஏரியா என்பது உங்களுக்கு தெரியும். இப்படி இருக்கும்போது சட்டவிரோதமாக ஒருவர் நுழைந்து, அவர் பிடிபட்டால் அவர்களுக்கு நாங்கள் சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?'' என்று மீண்டும் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‛‛இந்த விஷயத்தில் சட்ட நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று தான் நாங்கள் கூறுகிறோம்'' என்றார். அதற்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‛‛நீங்கள் ஆட்கொணர்வு மனு செய்துள்ளீர்கள். மீண்டும் அவர்களை கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறீர்கள். சட்டம் அனைவருக்கும் சமமானது. குறிப்பிட்ட நாட்டை சேர்ந்த ஒரு குழுவினருக்கு மட்டும் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால் அது இங்குள்ள மற்ற நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் பொருந்தும்'' என்றார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‛‛விசாரணைக்கு பிறகு நாடு கடத்த வேண்டும்''என்றார். ஆனால் அதனை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. மாறாக இந்த வழக்கை ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு வர உள்ள வழக்குடன் சேர்த்து பட்டியலிடும்படி கூறி ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+