குட் நியூஸ்.. இந்தியாவில் சில வாரங்களில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி.. ஒரு டோஸ் மட்டும் போதும்
டெல்லி: சிங்கிள் டோஸ் ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசி வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை இப்போது உச்சத்தில் உள்ளது. நாட்டில் இப்போது தினசரி வைரஸ் பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது.
இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணிகள்
இருப்பினும், நாட்டில் தேவையான அளவிற்குத் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதன் காரணமாக மாநில அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் மே 1ஆம் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் பல மடங்கு வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள்
இந்தியாவில் தற்போது வரை கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அவரசக்கால அடிப்படையில் வெளிநாட்டுத் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதாவது அந்த தடுப்பூசிகள் வெளிநாட்டில் மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தால் போதும். இந்தியாவில் தடுப்பூசி சோதனை மேற்கொள்ள தேவையில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூன் மாதம் இறக்குமதி
இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசி ஜூன் அல்லது ஜூலை மாதம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு தேவையான அனுமதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜான்சன் & ஜான்சன் மருந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு மருத்துவ குப்பிகளில் அடைக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.

Array
கொரோனாவுக்கு எதிராக ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் செயல்திறன் சுமார் 66%ஆக உள்ளது. இது மற்ற தடுப்பூசிகளைவிடக் குறைவு என்றாலும்கூட ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி சற்று முக்கியமானது. ஏனென்றால், மற்ற தடுப்பூசிகளுக்கு எல்லாம் 4 முதல் 6 வார இடைவெளியில் இரண்டாம் டோஸ் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஒரே டோஸ் மட்டுமே போதும். இதனால் அதிகளவிலான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியும்.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications