டெல்லி: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், ஸ்டெர்லைட் ஆலை திறப்பு உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இவ்வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் அதிரடியாக கூறி, ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு வெளியானததையடுத்து, காலை முதல் தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் தீர்ப்பு வெளியானதும், தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Feb 18, 2019, 4:19 pm IST
முகிலன் மாயமான விவகாரத்தில் சென்னை கமிஷனர் விளக்கமளிக்க உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு போலீஸே காரணம் என ஆதாரங்களை வெளியிட்டார் முகிலன்
கடந்த 15-ஆம் தேதி மதுரைக்கு ரயில் மூலம் சென்றவரை காணவில்லை
முகிலனை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
Feb 18, 2019, 3:22 pm IST
ஸ்டெர்லைட் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தூத்துக்குடி மக்கள் வரவேற்பு
இனிப்புகள் கொடுத்தும், சிறப்பு வழிபாடுகள் செய்தும் மக்கள் கொண்டாட்டம்
Feb 18, 2019, 11:58 am IST
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு
தமிழக அரசின் ஆணையை ஏற்று தீர்ப்பு வரவேற்கத்தக்கது
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் பேட்டி
Feb 18, 2019, 11:11 am IST
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக கைகளுக்கு கிடைக்கவில்லை
மீண்டும் மதுரை ஹைகோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளோம்