மோடி வெற்றிக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு படை வீரர் போட்ட பரபரப்பு கேஸ்.. உச்சநீதிமன்றம் தள்ளுபடி
டெல்லி: வாரணாசியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க கோரி முன்னாள், எல்லை பாதுகாப்பு படை வீரர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ராமசுப்பிரமணியன் ஆகிய 3 நீதிபதிகள் அமர்வு முன்பாக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

வாரணாசியில் மோடி வெற்றி
2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் நரேந்திர மோடி. அப்போது சமாஜ்வாதி கட்சி சார்பில் தேஜ் பகதூர் யாதவ், என்பவர் போட்டியிட மனு தாக்கல் செய்தார். இவர் எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளாக பணியாற்றியவர்.

எல்லை பாதுகாப்பு படை வீரர்
பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டி 2017ல் மூன்று வீடியோக்களை சமூக வெளியில் பகிர்ந்தார் தேஜ் பகதூர் யாதவ். இது ராணுவ விதிகளுக்கு மாறானது என்ற குற்றச்சாட்டால் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்தான் தேஜ் பகதூர் யாதவ்.

தேஜ் பகதூர் யாதவ்
எனவே தேஜ்பகதூர் யாதவ் மோடிக்கு எதிராக போட்டியிடப் போவது அப்போது பரபரப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் இவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து, மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தேஜ்பகதூர் யாதவ் வழக்கு தொடர்ந்திருந்தார். தனது வேட்பு மனுவை சட்டவிரோதமாக தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது. பிரதமர் மோடியின் வெற்றியை எளிதாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மனுதாரர் குற்றம் சாட்டினார். ஆனால், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

மனு டிஸ்மிஸ்
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தேஜ்பகதூர் யாதவ் மேல்முறையீடு செய்திருந்தார். மோடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகினார். மனுதாரர் தரப்பில் சத்தியபால் ஜெயின் ஆஜரானார். ஆனால் இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், இந்த மனுவை விசாரிப்பதற்கான முகாந்திரம் இல்லை என்று தெரிவித்து விட்டது.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications