கொரோனா வேக்சினேஷன்.. 2 கோடி டோஸ் "மார்க்கை" நெருங்கும் தமிழ்நாடு.. 40 கோடியை தாண்டிய இந்தியா!
டெல்லி: இந்தியாவில் இதுவரை 40,96,73,623 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு இன்னும் சில வாரங்களில் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் அலை கேஸ்கள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவில் இதுவரை 31,174,322 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 414,513 பேர் பலியாகி உள்ளனர். 30,353,710 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 406,099 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

எத்தனை
இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை 40,96,73,623 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. 32,47,08,901 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் இந்தியாவில் போடப்பட்டுள்ளது. 8,49,64,722 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இன்று இதுவரை 28,61,365 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

கேஸ்கள்
218899521 ஆண்களுக்கு இந்தியாவில் வேக்சின் போடப்பட்டுள்ளது. 190700606 பெண்களுக்கு இந்தியாவில் இதுவரை வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தற்போது இரண்டு கோடி பேருக்கு வேக்சின் போடும் நிலையில் உள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் தமிழ்நாடு 2 கோடி பேர் என்ற இலக்கை எட்டும். தமிழ்நாட்டில் இதுவரை 1,98,74,408 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம்
இந்தியாவில் உத்தர பிரதேசத்தில்தான் அதிகமாக வேக்சின் போடப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் உத்தர பிரதேசத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் வேக்சின் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் இதுவரை 4,14,53,652 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா கிட்டத்தட்ட உத்தர பிரதேசத்திற்கு மிக அருகில் வந்துவிட்டது.

நிலைமை
மகாராஷ்டிராவில் 4,00,70,285 பேருக்கு வேக்சின் இதுவரை போடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 3,01,03,043 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.ராஜஸ்தானில் 2,90,91,090 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2,77,47,194 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

பீகார்
மேற்கு வங்கத்தில் 2,66,12,965 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 2,56,90,052 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. பீகாரில் 2,14,70,689 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications