தினசரி உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் உயிரிழப்பு.. ஷாக் தரும் இந்தியா
டெல்லி: உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99,804 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையிலும் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 3,44,64,456 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை
10,27,042 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா தொற்றில் இருந்து 25,647,795 பேர் குணமடைந்தனர். உலகில் கொரோனா பாதிப்புடன் தற்போது 77,89,619 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 7,494,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 63,91,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வது இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனா தொற்றால் 48,49,229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் கொரோனாவால் இதுவரை 1,185,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா மரணங்கள் என்று பார்த்தால் உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 212,660 பேர் மரணம் அடைந்துள்ளனர். 2வது அதிகபட்சமாக பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 144,767 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99,804 ஆக உயர்ந்துள்ளது.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 1096 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 920 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 805 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
ஒரு நாள் பாதிப்பில் உலகிலேயே அதிகபட்சமாக நேற்று இந்தியாவில் கொரோனா தொற்றால் 81,693 பேர் பாதிக்கப்பட்டனர். 2வது அதிகபட்ச பாதிப்பு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது, அங்கு ஒரே நாளில் 47,309 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசலில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 35,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications