“மீடியா ஒன்” மலையாள சேனலுக்கு மத்திய அரசு விதித்த தடையை தற்காலிகமாக நீக்கியது உச்சநீதிமன்றம்
டெல்லி : மலையாளத்தில் பிரபலமான மீடியா ஒன் செய்தி சேனல் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் தடையை தற்காலிகமாக நீக்கி உள்ள உச்ச நீதிமன்றம் சேனல் அதன் ஒளிபரப்பை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது.
கேரளாவில் மிகப் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான மீடியா முன் தொலைக்காட்சியில் ஒளிபரப்புக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசு தடை விதித்தது.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் அனுமதிக்கப்பட்ட சேனல்கள் பட்டியலிலிருந்து மீடியாவும் நீக்கப்பட்டதால் ஒளிபரப்பு சேவையும் நிறுத்தப்பட்டது.

மீடியா ஒன் சேனல்
மீடியா ஒன் தொலைக்காட்சியின் சார்பில் சேனலுக்கு உரிமத்தை புதுப்பிக்கக் கோரி கடந்த ஆண்டே மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த தொலைக்காட்சிக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கவில்லை என்று கூறி சேனலை உரிமத்தை புதுப்பிக்க மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மறுத்துவிட்ட நிலையில், ஒளிபரப்பும் முடங்கியது.

நீதிமன்றத்தில் வழக்கு
ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு ஆதரவு கொடுத்ததாகவும் கடந்த 2020ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து இந்த சேனல் ஒரு தலை பட்சமாக செய்து ஒளிபரப்பியதாக மத்திய அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் சேனல் முடக்கப்பட்ட நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சேனல் வாதம்
இந்த மனுவை கேரள நீதிமன்றம் விசாரித்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தது. இதை அடுத்து மீடியா ஒன் சேனல் நிறுவனத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது மத்திய அரசு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் இன்று மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஒளிபரப்புக்கு அனுமதி
ஏற்கனவே தொலைக்காட்சியை நம்பி 400க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் , ஒளிப்பதிவாளர்கள், உள்ளிட்ட பலர் பணியாற்றி வரும் நிலையில் மத்திய அரசின் முடிவால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், மீடியா ஒன் மலையாள செய்தி சேனல் மீது மத்திய அரசு விதித்த தடைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதோடு சேனல் ஒளிபரப்பை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications