நாளை நான் சென்னையில் இருப்பேன்... பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட்
டெல்லி: பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், நாளை நான் சென்னையில் இருப்பேன் என்று அவர் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்.14) சென்னை வருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் வரும் பிரதமரை சென்னை விமான நிலையத்தில் காலை 10.35 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு காரில் செல்கிறார். அங்கு, அர்ஜுன் ரக பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார். மேலும், பல்வேறு புதிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்னர், விரிவுபடுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சிகளில் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அவர் பிற்பகல் 1.30 மணிக்கு தனி விமானம் மூலம் கேரளா செல்கிறார். அங்கும் பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், பிரமதர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது" என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications