பிணையக் கைதியாக 20 குழந்தைகள்.. கொலையாளி மிரட்டல்.. சுற்றி வளைத்த போலீஸ்.. கடும் சண்டை.. உ.பி.யில்
டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் ஜாமீனில் வெளிவந்த கொலையாளி ஒருவர், பிறந்தநாள் கொண்டாட்டம் என்று கூறி, தனது வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து வந்து, அவர்களை பிணையக் கைதியாக பிடித்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்ட நிலையில், அவர்கள் மீது கையெறி குண்டுகளை அந்த நபர் வீசியதால் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபாருக்காபாத் என்ற பகுதியில் இந்த திகில் சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த குற்றவாளியின் பெயர் சுபாஷ் பாதம். 15-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் மற்றும் பெண்கள் என சுமார் 20 பேரை இவர் பிணையக் கைதியாக பிடித்து வைத்துள்ளார்.
தகவல் அறிந்ததும், அந்த வீட்டை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது வீட்டின் மேல் நின்றபடி போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். மேலும் கையெறி குண்டுகளையும் அவர் வீசியுள்ளார்.
இதனால், அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. காவல்துறையினர் அதிரடியாக ஏதாவது நடவடிக்கை எடுத்தால், பிணையக் கைதியாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து வரும் என்பதால் மிகவும் எச்சரிக்கையோடு செயல்பட்டு வருகின்றனர்.
Farrukhabad Police: More than 15 children, and a few women, have been held hostage at a house by a man. Incident of firing has also taken place. Operation to rescue them is underway. Senior police officers are present at the spot. https://t.co/SFoEdEuq7g pic.twitter.com/PkPALZ4Z4Y
— ANI UP (@ANINewsUP) January 30, 2020
சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே, சம்பவ இடத்திற்கு தீவிரவாத எதிர்ப்பு படையைச் சேர்ந்த ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, காவல்துறை எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கப் போகிறது? குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு கிடைக்குமா? என்பது போன்றவற்றில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications