மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி.. தேர்தல் முடிவால் அமித்ஷா உற்சாகம்
டெல்லி: சத்தீஷ்கர், ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் நிலையில், பாஜக பிரதமர் மோடியின் தலைமை மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக அரையிறுதி என்று வர்ணிக்கப்பட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் மிசோரம் மாநிலம் தவிர்த்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், காங்கிரசும் நேரடியாக மல்லுக்கட்டின. தெலுங்கானாவில் இந்த 2 தேசிய கட்சிகளுடன் பாரதிய ராஷ்டிர சமிதியும் சேர்ந்ததால் மும்முனை போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி முன்னிலை நிலவரங்களின் படி சத்தீஷ்கர், ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்க உள்ளது.
அமித்ஷா கருத்து: 3 மாநில தேர்தல் முடிவினை அடுத்து பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் தேர்தல் முடிவு தொடர்பாக கருத்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பிரதமர் மோடியின் தலைமை மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என கருத்து தெரிவித்துள்ளார்.
அசைக்க முடியாத நம்பிக்கை: இது தொடர்பாக அமித்ஷா கூறியிருப்பதாவது:- ஆதரவு அளித்த தெலுங்கனா மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாஜக தெலுங்கனாவின் வளர்ச்சி பாதைக்காக தொடர்ந்து உழைக்கும். மக்களின் ஆதரவுடன் தெலுங்கானாவை செழுமை மிக்க மாநிலமாக மாற்றுவோம். தெலுங்கானாவில் பாஜக தொண்டர்களுக்கு எனது இதயப்பூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்று கூறினார்.
அதேபோல், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை ஆசிர்வதித்து வெற்றி அளித்த மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அமித்ஷா கூறியுள்ளார். பிரதமர் மோடியின் தலைமை மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்" என்று கூறியுள்ளார்.
-
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்!












Click it and Unblock the Notifications