குழந்தைகளுக்கு உயிரே போகலாம்.. மோசமான "சோகிங்" பாதிப்பு! பெற்றோர்களே இந்த உணவில் கவனமாக இருங்கள்
டெல்லி: குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது, கவனமாக இருக்க வேண்டும்.. எச்சரிக்கையுடன் இல்லையென்றால்.. குழந்தைகளுக்கு choking எனப்படும் மூச்சுத் திணறல் ஏற்படும் மோசமான ஆபத்து உள்ளது.
பொதுவாக வீடுகளில் குழந்தைகளை வளர்க்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் வளர்க்க வேண்டும். அவர்கள் விளையாட்டு போலச் செய்யும் காரியங்கள் கூட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அதிலும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது, கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எது செரிமானம் அடையும்.. எது கொடுக்கக் கூடாது... காரம் உள்ளிட்ட மசாலாக்கள் எவ்வளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் தொடர்ச்சியாக ஆலோசனை கொடுத்து வருகிறார்கள்.

சோகிங்
பொதுவாகவே சாப்பிடும் போது choking எனப்படும் மூச்சுத் திணறல் ஏற்படுவது பயங்கரமான அனுபவமாக இருக்கும்.. நாம் உணவைச் சாப்பிடும்போது, எதாவது மூச்சுக்குழாயில் சிக்கிக் கொண்டால் என்ன ஆகும். இதை யோசித்தாலே எவ்வளவு மோசமாக இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 4000 பேர் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல உணவு சாப்பிடும் போது ஏற்படும் மூச்சுத் திணறலால் உயிரிழக்கிறார்கள். மனிதர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு யோசித்துப் பாருங்கள். நாம் ஜாக்கிரதையாக இருக்கவில்லை என்றால், உணவு சாப்பிடுவதே அவர்கள் உயிருக்கு மோசமானதாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

எந்த உணவு
நாம் சாப்பிடும் உணவு மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்வதால் தான், இந்த சோகிங் ஏற்படுகிறது. இதனிடையே எந்த வகையான உணவு அதிகப்படியான சோகிங் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து வல்லுநர்கள் கண்டறிந்துள்ளது. பொதுவாகத் திராட்சை போன்ற பொருட்களே அதிகம் சோகிங்கை ஏற்படுத்தும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் உண்மையில் ஹாட்டாக் (hot dog sausages) என்ற பாஸ்ட் புட் தான் அதிக பாதிப்பு ஏற்படுத்துவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மற்ற உணவுகளைக் காட்டிலும் ஹாட் டாக் என் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் விளக்கவும் செய்துள்ளனர்.

ஏன் ஏற்படுகிறது.
பொதுவாகக் குழந்தையின் சுவாசப் பாதை சிறியதாக இருக்கும். அந்த இடத்தில் ஹாட் டாக் முழுமையாகச் சென்று அடைத்துக் கொள்வதால் குழந்தைகள் மூச்சு விட முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. ஹாட் டாக் உள்ளிட்ட இறைச்சிகளை ஒருபோதும் நாணயங்களைப் போல வெட்டக்கூடாது.. அதற்குப் பதிலாக, அது நீளமாகவே இறைச்சிகளை வெட்ட வேண்டும். அப்போது தான், அவை சுவாசப் பாதையில் சிக்கிக்கொண்டாலும் கூட, அது மூச்சுத் திணறலை ஏற்படுத்தாது. மேலும், குழந்தைகளுக்கு இறைச்சி போன்ற உணவைக் கொடுக்கும்போது ரொம்பவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இருமினால் என்ன செய்ய வேண்டும்
சாப்பிடும் போது குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால், முதலில் பீதி அடையாமல் இருப்பது ரொம்பவே முக்கியம்.. பதறியடித்துக் கொண்டு எதையும் செய்யக் கூடாது. குழந்தைக்கு இருமல் இருந்தால், அப்படியே விடுங்கள். ஏனெனில் பல நேரங்களில் இருமும் போது சிக்கியிருக்கும் பொருள் வெளியே வந்துவிடும். இருப்பினும், இதில் எந்த பயனும் கிடைக்கவில்லை என்றால் அல்லது குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது தொடர்ந்து உடனடியாக மருத்துவ உதவியை நாடவும். மேலும், கீழ் கூறப்பட்டுள்ள சில நடவடிக்கைகளை எடுத்தும் சிக்கியுள்ள பொருளை வெளியே எடுக்க முயலலாம்.

என்ன செய்யலாம்
முதலில் சற்று கீழ்நோக்கி சாய்த்து தோள்பட்டைகளுக்கு நடுவை வலுவாக அடிக்கவும். இது சிக்கியிருக்கும் பொருட்களை வெளியே கொண்டு வர உதவும். முகம் நிலத்தில் படுவது போலப் படுக்க வைக்கவும். இருமல் எதாவது வந்தால் நன்கு இருமட்டும்.. அது உள்ளே சிக்கிய பொருளை வெளியே கொண்டு வரும்.. முன்னோக்கிச் சாய்த்து முதுகில் வலிமையாக ஐந்து அடிகளைக் கொடுக்கவும். வாயில் எதாவது இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.. ஆனால் வாயில் விரல்களை விடக் கூடாது.

மருத்துவமனை
குழந்தைக்குப் பின்னால் நின்று, வயிற்று மற்றும் மார்பின் அடிப்பகுதியில் கையை வைத்து வலிமையாக அழுத்தவும். அது பொருளை வெளியே கொண்டு வர உதவும். பெரும்பாலான நேரங்களில் இதைச் செய்தாலே.. உள்ளே சிக்கியிருக்கும் உணவுப் பொருள் வெளியே வந்துவிடும். இவை எதுவும் வேலை செய்யவில்லை என்றால் உடனடியாக ஆம்புலன்ஸ் அழைக்கவும். மேலும், நோயாளி சுயநினைவை இழந்தாலோ CPR செய்யுங்கள்.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications