ED ரெய்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் ஓகே.. ஆனா அதை என்ன செய்வாங்க தெரியுமா? இதுல இவ்வளவு இருக்கா
டெல்லி: அமலாக்கத் துறை ரெய்டின் போது கைப்பற்றும் பணம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் கைப்பற்றப்படுவதாகச் செய்திகளை நாம் படித்திருப்போம். அப்படிக் கைப்பற்றப்படும் பொருட்களுக்கு என்ன ஆகும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போதெல்லாம் அமலாக்கத் துறை அந்த அரசியல்வாதி வீட்டில் ரெய்டு.. இந்த அரசியல்வாதி வீட்டில் ரெய்டு என நாம் தொடர்ச்சியாகப் பல செய்திகளைப் பார்த்து வருகிறோம்.

மேலும், ரெய்டில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக எல்லாம் செய்திகள் வெளியாகின்றன. ஆனால், இதுபோல கைப்பற்றப்படும் பணம் எங்கே செல்லும் என்ற தகவல் பலருக்கும் தெரியாது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ரெய்டு: நமது நாட்டில் பொருளாதார குற்றங்கள், பண மோசடி, ஊழல் குற்றச்சாட்டுகளை பொதுவாக அமலாக்கத் துறை தான் விசாரித்து வருகிறது. இதுபோன்ற நேரங்களில் அமலாக்கத் துறை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் அதிரடியாக ரெய்டு நடத்தி பணம், நகை உள்ளிட்டவற்றை கைப்பற்றும். இதுபோல ரெய்டு சமயங்களில் கைப்பற்றப்படும் ரொக்கம் என்னவாகும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
ரூல்ஸ்படி அமலாக்க துறையால் ரெய்டு நடத்தி பணத்தைப் பறிமுதல் செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால், மீட்கப்பட்ட பணத்தை வைத்திருக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை.. எனவே, கைப்பற்றப்பட்ட பணத்தை அமலாக்கத் துறை ரிசர்வ் வங்கி அல்லது பாரத ஸ்டேட் வங்கியில் அரசின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்ய வேண்டும்.
பஞ்சநாமா: அமலாக்கத் துறை பொதுவாக ஒருவரது வீட்டில் ரெய்டு நடத்தினால்.. அங்கு உள்ள அனைத்துப் பொருட்களையும் லிஸ்ட் போடுவார்கள். இதை பஞ்சநாமா என்பார்கள். பஞ்சநாமா என்பது குற்றம் நடந்த இடத்தில் ஒரு அதிகாரி என்ன பொருட்களை எல்லாம் கைப்பற்றினார் என்பதைப் பதிவு செய்யும் சட்டப்பூர்வமான ஒரு ஆவணம் ஆகும். இந்த ஆவணத்தில் அசையும் (வாகனங்கள், நகைகள் போன்ற சொத்துக்கள்) மற்றும் அசையா (வீடு, அலுவலகம்) சொத்துக்கள் என இரண்டும் இருக்கும்.
இப்படி எல்லாவற்றையும் லிஸ்ட்டாக போடுவார்கள்.. இந்த விரிவான பட்டியல் ரெடியாக பிறகு யாருடைய வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டதோ அந்த நபரின் கையெழுத்து பஞ்சநாமாவில் பெறப்படும்.
வாகனங்கள்: சோதனையின் போது இந்த பஞ்சநாமாவில் இணைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிடங்கிற்கு அனுப்பப்படும். அதற்கான கட்டணத்தை அமலாக்கத் துறை செலுத்திவிடும்.. பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் சேதமடையாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்டு 180 நாட்களுக்கு இதே நடைமுறை பின்பற்றலாம்.
சட்டம்: இந்தக் காலகட்டத்தில் அமலாக்கத் துறை சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்தால்.. வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு 60 நாட்கள் அவகாசம் கிடைக்கும். PMLA எனப்படும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை ஒருவருக்குத் தண்டனை கிடைக்கும்.
இதில் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், அந்நியச் செலாவணி சட்டம் (FEMA) மற்றும் PMLA ஆகிய இரண்டும் இந்தியா முழுமைக்கும் பொருந்தும். எனவே, இந்தியாவில் இருக்கும் எந்தவொரு நபர் மீதும் அமலாக்கத் துறையால் நடவடிக்கை எடுக்க முடியும்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications