"செல்லாது!" உயர் ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டில் மாறுபட்ட தீர்ப்பு.. யார் இந்த நீதிபதி ரவீந்திர பட்
டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டு வழக்கில் தலைமை நீதிபதி உடன் உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் மட்டுமே மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. முன்னேறிய வகுப்பினருக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீடு பொருந்தும்.
EWS எனப்படும் இந்த Economically Weaker Sections இட ஒதுக்கீட்டில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு கிடைக்கும்.

வழக்கு
ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் குடும்பத்தினர் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினராகக் கருதப்படுவார்கள். இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்த போதே, இதற்குப் பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மத்திய அரசிலும் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது. இதற்கிடையே இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது,

தீர்ப்பு
இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுவதாக வாதிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில் தலைமை நீதிபதி உடன் உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் மட்டுமே இதற்கு எதிரான தீர்ப்பை வழங்கினார். இருப்பினும் 3-2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ரவீந்திர பட்
இதற்கிடையே மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி ரவீந்திர பட் யார் என நெட்டிசன்கள் கூகுள் பக்கம் திரும்பி வருகின்றனர். ரவீந்திர பட் கர்நாடக மாநிலம் மைசூரில் 1958இல் பிறந்தவர். டெல்லியிலுள்ள இந்து கல்லூரியில் ஆங்கில இளங்கலை படிப்பை முடிந்த அவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். அதைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அவர் வழக்கறிஞராகப் பணி செய்தார்.

மருந்து கட்டுப்பாடு
குறிப்பாக மருந்து கட்டுப்பாடு விவகாரத்தில் பொது நலன் கருதி மிகப் பெரிய மருந்து நிறுவனத்தின் தடை கோரிக்கை ஏற்க மறுத்தவர் நீதிபதி பட். அதேபோல வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் திருத்தம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த அமர்விலும் நீதிபதி பட் இடம் பெற்றிருந்தார். அதில் நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதி வினீத் சரண் அளித்த தீர்ப்புக்கு ஒத்த கருத்தையே நீதிபதி எஸ்.ஆர். பட் தனது தீர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications