அசத்தல்.. இந்தியாவில் 5ஜி செல்போன் சேவை அறிமுகம்.. அனைவருக்கும் அனுமதி.. ரவிசங்கர் பிரசாத் பேட்டி
டெல்லி: இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் சேவை, பரிட்சார்த்த முறையில் துவங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செல்போன் சேவைகள் துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இந்தியா தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது.

தற்போது 4ஜி தொழில்நுட்பத்தில் செல்போன்கள் இயக்கப்படும் காலகட்டம் வந்துள்ளது. 3ஜியை விடவும் இது வேகமான இணையதள வசதியை கொடுக்கிறது. இந்த நிலையில்தான் 5ஜி ஸ்பெக்ட்ரம் வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரவிசங்கர் பிரசாத் இந்த தகவலை டெல்லியில் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து செல்போன் சேவை வழங்குனர்களுக்கும், வெள்ளோட்ட அடிப்படையில் 5ஜி சேவை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், சீனாவின் ஹுவாய் செல்போன் நிறுவனம் உள்ளிட்ட செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் 5ஜி சேவை வழங்குவதற்கான அனுமதி தரப்போகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஹுவாய் நிறுவனம் இந்தியாவில் 5ஜி செல்போன் சேவையை செயல்படுத்த நீண்டகாலமாக அனுமதி கோரி வருகிறது. மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications