தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது.. யோகி செம்ம ஹேப்பி,. பிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி
டெல்லி: தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல் மகிழ்ச்சி அடைந்துள்ள யோகி ஆதித்யாநாத், தனக்கு எதிரான பிரச்சனைகளை பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷாவிடம் கூறி சமாளித்த பின்னர் ட்விட் போட்டுள்ளார். அந்த ட்விட் பதிவில் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா தொற்றை சரியாக கையாளவில்லை, தான் தோன்றித்தனமாக சர்வாதிகாரமாக செயல்படுகிறார் என உத்தரப்பிரதேச பாஜக தலைவர்கள் பலர் யோகிக்கு எதிராக புகார் வாசிக்க தொடங்கியதால், கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் யோகி தலைமையில் மீண்டும் உத்தரப்பிரதேச தேர்தலை சந்திக்கலாமா வேண்டாமா என்கிற அளவிற்கு பாஜக மேலிடம் யோசிக்க தொடங்கியது.
ஏனெனில் தற்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்க உத்தரப்பிரதேச மாநிலம் தான் முக்கிய காரணம். அங்கு தான் பாஜக அதிக இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைத்தால் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பலமாக இருக்கும் என்பதால், பாஜக மேலிடம் உத்தரப்பிரதேச மாநிலத்தை மிகமிக கவனமாக கையாள்கிறது.

என்ன பிரச்சனை
அதனால் தான் யோகி ஆதித்யாநாத்திற்கு எதிராக உத்தரப்பிரதேச பாஜக தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் அடுத்தது பாஜக மேலிடத்திற்கு அனுப்பிய புகார்களை விசாரிக்க தொடங்கியது. அப்படி என்ன தான் உத்தரப்பிரதேசத்தில் பிரச்சனை, எதற்காக அங்குள்ள பாஜக தலைவர்கள் யோகிக்கு எதிராக திரும்பினர் என்பதை பார்ப்போம்.

ஒன் மேன்-ஷோ
பிரதமர் மோடிக்கு குஜராத்தில் இருந்த இமேஜ் போல் தனக்கு இமேஜ் உருவாக வேண்டும் என்று யோகி விரும்புகிறார். சக்தி வாய்ந்த தலைவராக தன்னை கருதும் யோகி ஆதித்யாநாத் "ஒன் மேன்-ஷோ" ஆக செயல்படுவதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். தங்களின் ஆலோசனைகள் எதையும் கேட்பது, கட்சியினரை அனுசரித்து செல்வது இல்லை. அவருக்கு தோன்றுவதையே செய்கிறார் என்று குமுறுகின்றனர்.

டெல்லி மேலிடம் யோசனை
யோகிக்கு எதிராக பல விஷயங்களை உள்ளுக்குள்ளேயே வைத்து குமுறிக்கொண்டிருந்த பாஜக நிர்வாகிகளுக்கு கொரோனா இரண்டாவது அலை பெரிய வாய்ப்பாக அமைந்தது. கொரோனாவை கையாள்வதில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் அரசின் செயல்பாடுகள் சரியில்லை என தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். போதாத குறைக்கு சர்வதேச ஊடகங்கள், தேசிய ஊடகங்கள் பல ஊடகங்கள் உத்தரப்பிரதேசத்தின் சுகாதார கட்டமைப்பையும் யோகி ஆதித்யாநாத் செயல்பாட்டையும் விமர்சித்தன. உச்சகட்டமாக பாஜக நிர்வாகிகளே யோகி தலைமையில் மீண்டும் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டுமா என்பது டெல்லி மேலிடம் யோசித்து பார்க்க வேண்டும் என்கிற அளவிற்கு புகார்களை வாசிக்க தொடங்கினர்.

பஞ்சாயத்து தேர்தல்
அண்மையில் நடந்த பஞ்சாயத்து தேர்தல்களில் பாஜகவிற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை இந்துத்துவா ஆதரவு பகுதிகளான அயோத்தி மற்றும் மதுரா போன்றவற்றில் தோல்வி அடைந்ததால் பாஜக மேலிடம் யோகி மீது அதிருப்தி அடைந்தது. இதற்கிடையே மோடியின் வாரிசாக தன்னை நினைத்துக்கொண்டு யோகி செயல்பாடுகிறார் என்கிற அளவிற்கு புகார்கள் பறந்தன.

விசாரணை நடத்தினார்
இப்படி தொடர்ச்சியான புகார்கள் ஆதித்யநாத்திற்கு எதிராக வந்தால் டெல்லி மேலிடம் ஒரு குழுவை லக்னோவுக்கு அனுப்பி, உண்மையை விசாரித்தது. அந்த குழுஅளித்த அறிக்கைக்கு பின்னர் யோகியின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் சூழலும் உருவானது. பாஜக மேலிடம் அவரை டெல்லிக்கு உடனடியாக அழைத்தது. நேற்று பிரதமர் மோடியை சந்தித்து யோகி ஆதித்யாநாத் பேசினார். அப்போது லக்னோவிற்கு சென்ற டீம் கொடுத்த ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு அவர் பல்வேறு விஷயங்களை கேட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் கட்சியை வலுப்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசித்ததகாவும் கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்லவும் அறிவுறுத்தியாக கூறப்படுகிறது.

யோகிக்கு ஆதரவு
பிரதமர் மோடியை சந்தித்த பின்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரையும் யோகி ஆதித்யா நாத் சந்தித்தார். இந்த சந்திப்பின் மூலம் யோகி தன் நிலைப்பாட்டை விளக்கி உள்ளார். கடைசியில் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட பாஜக மேலிடம் யோகி ஆதித்யாநாத்தை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது. எனினும் கட்சியின் நிர்வாகிகளை சமாதானம் செய்வதற்காக உபி பாஜகவின் உயர்மட்ட கட்டமைப்பில் முக்கிய மாற்றம் வரலாம் என்கிறார்கள்.

மோடிக்கு நன்றி
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல் மகிழ்ச்சி அடைந்துள்ள யோகி ஆதித்யாநாத், தனக்கு எதிரான பிரச்சனைகளை பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷாவிடம் கூறி சமாளித்த பின்னர் ட்விட் போட்டுள்ளார். அந்த ட்விட் பதிவில் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications