செந்தில்குமார் தர்மபுரி திமுக வேட்பாளர்: தர்மபுரி மாவட்டமாக காரணமாக இருந்த வடிவேலுவின் பேரன்!
தர்மபுரி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் மருத்துவர் செந்தில்குமார்.
Recommended Video

தர்மபுரி: தர்மபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் டாக்டர் செந்தில்குமார்.
தர்மபுரியைச் சேர்ந்தவரான செந்தில்குமார்(42), மருத்துவம் படித்தவர். மருத்துவமனை, பள்ளி, பார்மசி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார் செந்தில்குமார். தர்மபுரி மாவட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் இவரது தாத்தாவான முன்னால் எம்.எல்.ஏ. டி.என்.வடிவேலு ஆவார். இவர் காமராஜரால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கடந்த 1965ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டவர். சேலம் -தருமபுரி - பெங்களூரு ரயில் போக்குவரத்துக்கும் காரணமாக இருந்தவர் வடிவேலு தான்.
எதிர்பார்ப்பிற்குரிய தர்மபுரி எம்.பி. தொகுதியில் சிட்டிங் எம்.பி. பாமக அன்புமணியை எதிர்த்து திமுக வேட்பாளராக டாக்டர் செந்தில்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். தர்மபுரி வன்னியர் பெல்ட் என்பதால் அன்புமணிக்கு எதிராக அதே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையே திமுகவும் அமமுகவும் நிறுத்தியுள்ளன.
இதனால் நிச்சயம் இம்முறை இத்தொகுதியில் வாக்கு வங்கி பிரியும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.












Click it and Unblock the Notifications