90 ஏக்கரில் நிலம்.. பட்டா இல்லாத சொத்துக்கள் பதிவு! வக்பு வாரியத்துக்கு பத்திர பதிவுத்துறை விளக்கம்
திண்டுக்கல்: திருச்செந்துறை கிராம மக்கள் பல தலைமுறையாக அனுபவித்து வந்த நஞ்சை - புஞ்சை நிலங்களையும், வாழ்ந்து வந்த வீடுகளையும், வாங்கவும் விற்கவும் முடியாமல் தவித்து வந்த நிலையில், திருச்செந்துறை கிராமத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி திருச்செந்துறை கிராமத்தில் வக்ஃப் உரிமை கொண்டாடும் நிலத்தை யாரும் வாங்கவும் விற்கவும் முடியும். இந்நிலையில், திருச்செந்துறை போன்று, பழனியிலும் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதறகாக பதிவுத்துறை வக்ப் வாரியத்திற்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் சுமார் 90 ஏக்கர் நிலம், வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று பத்திரப்பதிவிற்கு தடை செய்யப்பட்டிருந்தது.

கடந்த 3 ஆண்டுகளாக பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பாலசமுத்திரம் கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான இடங்களை பத்திரப் பதிவு செய்து விற்பனை செய்யவோ, வாங்கவும் முடியாத நிலைமை இருந்து வந்தது.
பத்திரப்பதிவுக்கு அனுமதி
இதனை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பிறகு, தமிழக அரசு தலையிட்டு முறையான விசாரணை செய்து, பாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள நிலங்கள் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது இல்லை என்று தெரிய வந்ததால் பத்திரப்பதிவுக்கு அனுமதி அளித்தது.
பொதுமக்கள் தங்களது பெயரில் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்தால் அதனை பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதால் பாலசமுத்திரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்னர்.
இந்நிலையில், பாலசமுத்திரம் கிராமத்தில், குறிப்பிட்ட சில சர்வே எண்களுக்கு உட்பட்ட, 90 ஏக்கர் நிலம் தங்களுக்கு தானமாக கொடுக்கப்பட்டது என்று வக்ப் வாரியம் உரிமை கொண்டாடுகிறது.
பதிவுத்துறை அலுவலகம்
இந்த நிலங்களை, பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கக்கோரி, வக்ப் வாரிய நிர்வாகம், பதிவுத்துறை தலைவருக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது.. இதற்கு பதிவுத்துறை தலைவர் அலுவலகம் பதில் அளித்துள்ளது:
அதில், "திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பாலசமுத்திரம் கிராமத்தில், வக்ப் வாரியம் கோரிக்கை விடுத்துள்ள நிலங்கள் மீது, வக்ப் வாரியத்துக்கு உள்ள உரிமையை, முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். வருவாய் துறையின், 'தமிழ் நிலம்' தகவல் தொகுப்பில், குறிப்பிட்ட சர்வே எண்கள், வக்ப் வாரியம் பெயரில் பட்டா இருப்பதாக குறிப்பிடப்படாத நிலையில், அந்த நிலங்களின் பத்திரப்பதிவுக்கு தடை விதிக்க முடியாது.
பதிவுத்துறை விளக்கம்
தனியார் பெயரில் பட்டா காணப்பட்டால், அதன் உட்பிரிவு பட்டா, வக்ப் வாரியம் பெயரில் தெளிவாக இல்லாவிட்டால், பத்திரப்பதிவுக்கு தடை விதிக்க முடியாது. இத்தகவல் வக்ப் வாரிய நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, திருச்சி மாவட்டம் திருச்செந்துறை போலவே , பழனியிலும் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, பதிவுத்துறை வக்ப் வாரியத்திற்கு இவ்வாறான விளக்கத்தை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications