தொழில் அதிபர்கள் வீடுகளில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் ‘திடீர் விசிட்’.. பரபரத்த பழனி.. பின்னணி என்ன?
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், முக்கியமான தொழிலதிபர்கள், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளுக்கு திடீரென வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பழனியில் உள்ள முக்கிய நகைக்கடை அதிபர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் பில்டிங் காண்ட்ராக்டர்கள் உள்ளிட்ட சிலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சேவை மற்றும் சரக்கு, மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென சென்றனர். இதனையடுத்து வரிஏய்ப்பு தொடர்பான சோதனை நடப்பதாக தகவல் பரவியது.

இதனையடுத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 25 கோடி ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும் தொழில் நிறுவனங்கள், வணிகர்கள் ஆகியோர் செலுத்தக்கூடிய ஜிஎஸ்டி வரியானது முறையாக செலுத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து, கட்டுமான நிறுவனங்களுக்கான வரி 12சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தபட்டுள்ள நிலையில் வரி செலுத்துவதில் தவறு செய்தால் அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தவே வந்ததாகவும், எப்போதும் தொழிலதிபர்களை நேரில் அழைத்து அறிவுறுத்தப்படும் நிலையில் தற்போது அதிகாரிகளே நேரில் வந்து அறிவுறுத்துவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இது வழக்கமான நடைமுறைதான் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் திடீர் வருகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பழனி அருகே ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டி மற்றும் மார்க்கம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், மீண்டும் சோதனை என தகவல் பரவியதால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications