ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கணவனை தள்ளிவிட்டு காப்பாற்றி உயிரை விட்ட மனைவி.. என்ன நடந்தது?
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, ஆசை ஆசையாக கட்டிக்கொண்டிருந்த வீட்டில் கணவர் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், அவரை தள்ளிவிட்டு காப்பாற்றிவிட்டு, மனைவி உயிரை விட்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குளத்துப்பட்டியை சேர்ந்த 37 வயதாகும் பாண்டி கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி 30வயதாகும் உதயசூரியா நிலக்கோட்டையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.

நிலக்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் டிரைவர் பாண்டி புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அண்மையில் தான் அந்த வீட்டிற்கு மேல்தளம் (கான்கிரீட் ) போட்டார்கள். மாடிக்கான வேலை நடப்பதால் வெளிச்சத்துக்காக, வீட்டுக்குள் தற்காலிகமாக மின்விளக்கு ஒன்றை அவர் எரிய விட்டிருக்கிறார்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு நேரத்தில் கணவன்-மனைவி 2 பேரும் புதிய வீட்டுக்கு சென்றுள்ளார்கள். அங்கு தாங்கள் ஆசையோடு கட்டி வரும் வீட்டிற்கு தண்ணீரை குழாய் மூலம் பீய்ச்சி அடித்தனர். அப்போது விளக்குக்கு பயன்படுத்திய வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டிருந்தது.
அதன் மீது தண்ணீர் பட்டவுடன், எதிர்பாராதவிதமாக பாண்டி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டி கூச்சலிட்டார். இதையடுத்து கொஞ்சம் கூட யோசிக்காத உதயசூரியா தனது கணவரை காப்பாற்றுவதற்காக அவரை அங்கிருந்து தள்ளி விட்டார். இதனால் உதயசூரியா மீது மின்சாரம் பாய்ந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே உதயசூரியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கணவரை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மனைவி பலியான சம்பவம், திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications