ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிப். 5 ஆம் தேதி அரசு விடுமுறை
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய அரசு , தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதை அடுத்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 19 ஆம் தேதியாகும். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 47 பேர் போட்டியிடுகிறார்கள். சுயேச்சைகள் பத்மராஜன், செல்லக்குமார் உள்ளிட்டோரும் போட்டியிடுகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications