ஈரோடு பெண்களுக்கு சந்தோஷம்: மாவு அரைக்கும் கிரைண்டர் மானியத்தில் 50% வரை சலுகை! அரசின் மாஸ் திட்டம்
ஈரோடு: சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பெண்களின் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு சூப்பர் திட்டம் ஒன்றை சமீபத்தில் கொண்டு வந்திருந்தது... இது குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தது. இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழக அரசு பெண்களுக்காக சூப்பர் திட்டம்
அமைச்சர் வெளியிட்டிருந்த அறிவிப்புகளில், பெண்களை அதிகமாக ஈர்த்தது கிரைண்டர் குறித்த அறிவிப்பாகும்.. அதாவது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, 2000 மகளிருக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மொத்தம் 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேல் மதிப்பிலான உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5000/- மானியத் தொகையாக வழங்கப்படும்.
50 சதவீதம் மானியம்
இத்திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் 2000 மகளிருக்கு மொத்தம் 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்திருந்தார்
தமிழக அரசை பொறுத்தவரை, பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு மானியத்தொகை வழங்கி வருகிறது.. சுயதொழில் தொடங்க ரூ. 50,000 மானியம், மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ. 18,000 நிதி உதவி, சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வரை கடன் மற்றும் 50% மானியம் போன்ற திட்டங்கள் உள்ளன.
கிரைண்டருக்கு 5 ஆயிரம்
எனினும், தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிரைண்டருக்கு 5 ஆயிரம் மானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, பெண்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்து வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில், "சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பெண்களின் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஈரோடு பெண்களுக்கு சூப்பர் சான்ஸ்
அதன்படி நடப்பு 2025- 2026ம் நிதியாண்டுக்காக வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது அதன் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 12ம் தேதிக்குள், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தின் 6வது தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424- 2261405 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications