விவசாயம் செய்ய விரும்பினேன்.. தலைமை நீதிபதியான அன்று வாழ்த்திய 2 பேர்.. சதாசிவம் நெகிழ்ச்சி
ஈரோடு : ஆளுநர் பதவியை விட விவசாயம் பார்க்கத்தான் தான் ஆர்வமாய் இருந்ததாக கேரளா ஆளுநர் சதாசிவம் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா மாநில ஆளுநருமான சதாசிவம் ஈரோட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தனது மலரும் நினைவுகள் குறித்தும், மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் சொந்த ஊரான ஈரோட்டில் பேசியுள்ளார்.
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி பொன்விழா நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் சதாசிவம் பேசியதாவது:

சாதாரண குடும்பதை சேர்ந்தவன்
"நான் ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். ஈரோடு மாவட்டம் சிங்கம் பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பள்ளி படிப்பை படித்தேன். கல்லூரி படிப்பை ஈரோடு சி.எம்.சி. கல்லூரியில் படித்தேன். சட்டப்படிப்பை சிவகாசியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் முடித்தேன்.

மகிழ்ச்சி அளித்த வாழ்த்து
நாம் எவ்வளவு பெரிய பதவிக்கு சென்றாலும். நாம் வந்த வழியை திரும்பி பார்க்க வேண்டும். நான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற முதல்நாளில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியது மகிழ்ச்சியாக இருந்தது

பெண்களுக்கு அறிவுரை
உங்களில் யார் வேண்டுமானாலும் முயற்சி செய்தால் கண்டிப்பாக பெரிய பதவிக்கு வர முடியும். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே பெண்கள், தாங்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை வெளியில் சொல்லும் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆளுநர் சதாசிவம் விருப்பம்
நான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு விவசாயம் செய்ய வேண்டும் என்று தான் நினைத்தேன். அது பற்றி அறிவித்தும் இருந்தேன்.

முதலில் தயங்கினேன்
அப்போது கேரள ஆளுநர் பதவி எனக்கு வந்தது. முதலில் கவர்னர் பதவியை ஏற்க தயங்கினேன். பின்னர் என் நலம் விரும்பிகள் உங்களை போல் பலர் ஓய்வு பெற்ற பிறகு ஆளுநர் ஆகி உள்ளனர். நீங்களும் பதவி ஏற்கலாம் என தெரிவித்தனர். அதன்படி கேரள ஆளுநராக மாறினேன்" இவ்வாறு கூறினார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications