நேரடியாக தலையிட்ட ஜெகன் மோகன் ரெட்டி! மிரட்டி பணம் பறித்த வழக்கில்.. உறவினரை கைது செய்ய உத்தரவு
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் இப்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவரான ஒய்.எஸ்.கொண்டா ரெட்டி, அங்குள்ள கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் டெண்டருக்கு மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.

ஆந்திரா
அந்த கட்டுமான நிறுவனம் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் மிக முக்கிய பாஜக தலைவருக்குச் சொந்தமான நிறுவனம் என்று கூறப்படுகிறது. கடப்பாவில் முதல்வரின் புலிவெந்துலா தொகுதியில் உள்ள வேம்பள்ளி- ராயச்சோட்டி சாலையை மேம்படுத்தும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்ததாரரிடம் தான் ஒய்.எஸ். கொண்டா ரெட்டி பணம் பறித்துள்ளார்.

முதல்வர் உத்தரவு
இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பேசுபொருள் ஆன நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திரா முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்படி கொண்டா ரெட்டி கைது செய்யப்பட்டார். சொந்த கட்சியைச் சேர்ந்த ஒருவரை ஆந்திரா முதல்வர் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள கொண்டா ரெட்டி, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் என்று கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு
மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்தப்படும் என்றும் இந்த விவகாரத்தில் யாரையும் தப்பிக்க விட மாட்டோம் என்றும் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஜெகன் உத்தரவின் பேரில் சக்ராயப்பேட்டை போலீசார் கொண்டா ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

கைது
கொண்டா ரெட்டியின் ஃபோன்கால் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து ஆய்வு நடத்தினர். அதில் அவர் சமீப நாட்களில் கட்டுமான நிறுவன ஊழியர்களைப் பல முறை அழைத்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து நேற்று அவர் அவர் கைது செய்யப்பட்டார். கொண்டா ரெட்டி அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

என்ன நடந்தது
இதுகுறித்து கடப்பா காவல் கண்காணிப்பாளர் கே.கே.அன்புராஜன் கூறுகையில், "கொண்டா ரெட்டி, கடந்த மே 5ஆம் தேதி ஒப்பந்ததாரரை அழைத்து லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்காவிட்டால், அரசின் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலையை நிறுத்திவிடுவேன் என்று மிரட்டினார். கொண்டா ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்தோம். அதன்படி, அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications