சீர்வரிசை கொண்டு போன அண்ணன்.. தங்கையின் தகாத உறவு.. வீட்டிற்குள் நுழைந்ததுமே கொதித்த கணவன்.. ஓ காட்
ஹைதராபாத்: திருவிழாவையொட்டி சீர் செய்வதற்காக, தங்கையின் வீட்டுக்கு அண்ணன் வந்தபோதுதான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய 2 பேரை தீவிரமாக வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.
தெலங்கானா மாநிலம் கோதாவரிகனியில் உள்ளது சிங்கரேணி அரசு மருத்துவமனை.. இங்கு தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருபவர் வினய்.. இவருக்கு 30 வயதாகிறது.. இவருக்கு அஞ்சலி என்ற 25 வயது பெண் அறிமுகமானார்.

அஞ்சலியும், வினய் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்தான் .. அஞ்சலிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், நாளடைவில் வினய்க்கும், அஞ்சலிக்கும் இடையேயான பழக்கம் நெருக்கமாகிவிட்டது.. இதனால், குடும்பத்தை மறந்த அஞ்சலி, கள்ளக்காதலனுடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிவந்துள்ளார்..
தவறான போக்கு: அஞ்சலியின் இந்த தவறான போக்கு, அவரது குடும்பத்தினருக்கு தெரிந்துவிட்டது.. குறிப்பாக கணவனும், அண்ணனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்... ஆனாலும் அஞ்சலி காதலை கைவிடவில்லை... அதேபோல வினய்யின் வீட்டிலும் விஷயம் தெரிந்து, அவரது பெற்றோரும் கொந்தளித்து விட்டார்கள்.. ஆனால், வினய்யும் அஞ்சலியை கைவிட முடியாது என்று சொல்லிவிட்டார்.. எக்காரணம் கொண்டும் வினய்யுடனான பழக்கத்தை கைவிட முடியாது என்று கறாராக அஞ்சலியும் சொல்லிவிட்டார்..
ஒருகட்டத்தில், அஞ்சலி 4 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார்.. வினய்யும், அஞ்சலியை அழைத்து கொண்டு, தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.. இவர்கள் 2 பேரை பார்த்ததுமே வினய்யின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.. அஞ்சலியை வீட்டிற்குள் சேர்க்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர்.. எனினும், மகனின் விருப்பத்தை மறுக்க முடியாமல் இருவரையும் ஏற்றுக் கொண்டனர்.
வாடகைக்கு வீடு: பிறகு அவர்களின் விருப்பப்பப்படி ஹனுமன்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கேயே தங்க வைத்தனர்.. ஆனால், அஞ்சலி வீட்டில் அனைவரும் கொந்தளிப்புடன் இருப்பதால், யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ரகசியமாக குடி வைத்திருந்தனர்..
இதனிடையே தன்னுடைய தங்கை அஞ்சலி வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டதால், அண்ணன் உச்சக்கட்ட ஆத்திரத்தில் இருந்தார்.. அதனால் ஓடிப்போன ஜோடியை தேடி ஆரம்பித்தார்.. எங்கு தேடியும் அவர்களை பற்றின விவரம் கிடைக்காததால், அஞ்சலிக்கு போன் செய்து பாசமாக பேசுவதை போல நடித்தார்.
திருவிழா: "சத்துலபதுகம்மா திருவிழா வருவதால், பிறந்த வீட்டின் சீர் செய்வது முறையாகும்.. அதனால், அந்த சீரை வாங்கி கொண்டு, நீ உன் விருப்பப்படியே வாழலாம்.. ஆனால் நீ இருக்கும் இடம் தெரியாததால் சீர் கொண்டு வந்து தர முடியவில்லை... வினய்யை மட்டும் நான் சொல்லும் இடத்துக்கு அனுப்பி வைத்தால், அவருடன் சேர்ந்து உன் வீட்டிற்கு நானே சீர்வரிசைகளை கொண்டு வருகிறேன்" என்று உருகி உருகி பேசினார்.
இதை நிஜமென்று நம்பிய அஞ்சலி, வினய்யிடம் விவரத்தை சொல்லி, தன்னுடைய அண்ணனை வீட்டுக்கு அழைத்து வரும்படி சொன்னார்.. அதன்படியே, வினய்யும், அஞ்சலியின் அண்ணன் சொன்ன இடத்துக்கு சென்றார். அங்கே, அஞ்சலியின் அண்ணனும், அஞ்சலியின் கணவரும் இருந்தனர்.. ஆனால் அவர்தான் அஞ்சலியின் கணவர் என்பது வினய்க்கு தெரியாது. அஞ்சலி அண்ணனின் நண்பர் என்று நினைத்து, இருவரையுமே தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்தார்.
கடுமையான வாக்குவாதம்: வீட்டிற்கு அண்ணனுடன் சேர்ந்து, தன்னுடைய கணவரும் வீட்டுக்குள் வந்து நிற்பதை பார்த்ததுமே அஞ்சலிக்கு தூக்கி வாரிப்போட்டது.. பிறகு இரு தரப்பினரிடமும் கடுமையான வாக்குவாதம் வெடித்தது.. ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த அஞ்சலியின் அண்ணனும், கணவரும், வினய்யின் வாக்குவாதத்தை கண்டு, மேலும் ஆவேசம் அடைந்தனர். இதனால், அஞ்சலியை, அந்த வீட்டிலிருந்த ஒரு ரூமில் தள்ளி பூட்டிவிட்டார்கள்.. பிறகு வினய்யை 2 பேரும் சேர்ந்து சரமாரி தாக்கி அங்கிருந்த கத்தியால் குத்தி கொன்று, அங்கிருந்து தப்பி விட்டனர்.
வினய், மற்றும் அஞ்சலியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தந்தார்கள். ஆனால் போலீசார் விரைந்து வருவதற்குள் வினய்யின் உயிர் பறிபோயிருந்தது.. பின்னர் அவரது சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பி ஓட்டம்: இதனிடையே, வினய்யின் பெற்றோர், தங்கள் மகனின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். தங்கள் மகனின் இந்த நிலைமைக்கு காரணம் அஞ்சலிதான் என்று கூறி, அஞ்சலியை தாக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அங்கிருந்த போலீசார் அஞ்சலியை பாதுகாப்பாக மீட்டுவிடடனர். இப்போது, தப்பியோடிய அஞ்சலியின் கணவரையும், அண்ணனையும் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications