உங்க பொண்ணு ஓடி போயிருப்பா.. போய் தேடுங்க.. புகார் தந்த ஹைதராபாத் பெண்ணின் பெற்றோரிடம் சொன்ன போலீஸ்
ஹைதராபாத் கால்நடை மருத்துவரின் வன்புணர்வு கொலை வழக்கில் போலீசார் வழக்கு பதியாமல் மிகவும் மெத்தனமாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத் கால்நடை மருத்துவரின் வன்புணர்வு கொலை வழக்கில் போலீசார் வழக்கு பதியாமல் மிகவும் மெத்தனமாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. புகார் கொடுக்க வந்த பெண்ணின் பெற்றோரை போலீசார் அவமானப்படுத்தி உள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது நிரம்பிய கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
அந்த இடத்திலேயே அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, அதன் பின் அந்த பெண்ணை கொலை செய்து உள்ளனர். அதோடு பின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இருக்கும் பாலத்தின் கீழ் வைத்து எரித்து இருக்கிறார்கள்.

என்ன போலீஸ்
இந்த நிலையில், இந்த வழக்கில் சத்தனபள்ளி டோல் கேட் போலீசாரின் செயல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்நாள் இரவு பெண் வரவில்லை என்றதும் மறுநாள் காலை போலீசாரிடம் அவரின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். வியாழக்கிழமை காலை புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களின் புகாரை ஏற்கவில்லை.

ஆனால் என்ன
அந்த பெண்ணின் பெற்றோர் எவ்வளவு முயன்றும் கூட போலீசார் அவர்களின் புகாரை ஏற்கவில்லை. உங்க பெண் ஓடி போய் இருப்பார். அவருடைய போன் சுவிட்ச் ஆப் செய்து இருக்கிறார். கண்டிப்பாக ஓடி போய் இருப்பார். அதனால் வழக்கு பதிய முடியாது.

வழக்கு
இது மிஸ்ஸிங் கேஸ் கிடையாது. அவரின் நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி பாருங்கள் என்று போலீசார் அந்த பெண்ணின் பெற்றோரிடம் கூறி உள்ளனர். அதேபோல் அந்த காணாமல் போன சம்பவம் நடந்தது சத்தனபள்ளி டோல் கேட் எல்லையில், அதனால் வழக்கு எந்த போலீஸ் ஸ்டேஷன் வரையறைக்கு உட்பட்டது என்றும் ஆராய்ந்து காலம் தாழ்த்தி உள்ளனர். இதற்கு மத்தியில்தான் அந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

உடல் கிடைத்தது
பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு, கருகிய நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் புகைப்படங்கள் வெளியான பின்தான் இதன் கொடூரத்தை போலீசார் புரிந்து கொண்டனர். அதன்பின் மேலதிகாரிகள் அழுத்தம் கொடுத்து, இந்த வழக்கை விசாரித்து, வேகமாக முடித்துள்ளனர். இதற்காக 10 தனிப்படை அமைக்கப்பட்டு தெடுத்த வேட்டை நடந்தது.

கைது செய்தனர்
இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் அதன்பின் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கொலையாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications