சொந்த நாட்டை பாருங்கள்.. இந்திய முஸ்லீம்கள் குறித்து இம்ரான் கான் கவலைப்பட வேண்டாம்.. ஓவைசி
ஹைதராபாத்: சொந்த நாட்டை பற்றி கவலைப்படுங்கள். இந்திய முஸ்லீம்கள் குறித்து கவலைப்பட வேண்டாம் என ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தும் வீடியோ பதிவாகியிருந்தது. அப்போது இந்திய அரசு மீது குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு உத்தரப்பிரதேச போலீஸார் மறுப்பு தெரிவித்தனர். மேலும் இம்ரான் கான் பதிவு செய்த வீடியோக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தில் பதிவு செய்யப்பட்டது. போலியான வீடியோவை பதிவு செய்து இந்திய அரசு மீது அபாண்டமாக குற்றம்சாட்டியதாக உ.பி. போலீஸ் தெரிவித்தது.

தலைவர்கள்
தான் பதிவு செய்த வீடியோக்கள் தவறானது என்பதை அறிந்த இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அவற்றை நீக்கினார். இந்த சம்பவம் குறித்து இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கவலை வேண்டாம்
இதுகுறித்து ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.பி. அசாதுதீன் ஓவைசி கூறுகையில், இந்திய முஸ்லீம்கள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கவலைப்பட வேண்டாம்.

நிராகரிப்பு
சொந்த நாட்டை பற்றி அவர் கவலைப்பட வேண்டாம். சொந்த நாட்டைப் பற்றி மட்டும் இம்ரான் கான் கவலைப்பட்டால் போதும். ஜின்னாவின் தவறான கொள்கையை நிராகரித்துவிட்டனர்.

இந்திய முஸ்லீம்
இந்திய முஸ்லீம்களாக இருப்பதை பெருமையாக கருதுகிறோம். அப்படியே இருப்போம் என பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications