கண்ணீர் மல்க பிரியாவிடை பெற்ற நரசிம்மன்..! உருக்கமான வழியனுப்பு நிகழ்வு ..!
Recommended Video
ஐதரபாத்: தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த நரசிம்மன் சொந்த ஊரான சென்னைக்கு புறப்படும் முன்பு, அவருக்கு உருக்கமான வழியனுப்பு விழா நடைபெற்றது.
தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த நரசிம்மனின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, அம்மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார் தமிழிசை சவுந்தரராஜன். இதையடுத்து தனது சொந்த ஊரான சென்னைக்கு நரசிம்மனும் அவரது மனைவியும் நேற்று புறப்பட்டனர். அப்போது பேகம்பேட் விமான நிலையத்திற்கு சென்று நரசிம்மனுக்கு பிரியா விடை கொடுத்து வழியனுப்பி வைத்தார் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்.

அதிக நாட்கள் ஆளுநர்
இந்தியாவிலேயே அதிக நாட்கள் ஆளுநராக இருந்தவர் என்ற வரலாற்று பெருமைக்கு சொந்தக்காரர் நரசிம்மன். ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்த போது கடந்த 2009-ல் ஆளுநராக அவர் பதவியேற்றுக்கொண்ட நேரத்தில், தெலுங்கானாவை தனி மாநிலமாக்கக் கோரி கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை வலுவடைந்து ஆந்திரா முழுவதும் உச்சக்கட்ட பரபரப்பு நிலவிய நிலையில் அதனை லாவகமாக கையாண்டார் நரசிம்மன்.
ஒருங்கிணைந்த ஆந்திரா, தலைநகரங்கள் பிரிக்கப்படாத நிலையில் தெலுங்கானா-ஆந்திரா, மீண்டும் தெலுங்கானா என கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக ஐதரபாத் ராஜ்பவனில் தங்கி ஆளுநர் பொறுப்பை நிர்வகித்தார் நரசிம்மன்.

மூத்த சகோதரர்
ஆளுநர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நரசிம்மன் பற்றி கூறிய சந்திரசேகர் ராவ், அவரை தனது மூத்த சகோதரராகவே எண்ணியதாகவும், பல நேரங்களில் ஆலோசனைகள் கேட்டுள்ளதாகவும் உருக்கமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய நரசிம்மன், மூத்தவர்களுக்கு மரியாதை, துயரத்தில் இருப்பவர்கள் மீது அக்கறை, மக்களுக்கு உண்மையாக இருத்தல் ஆகிய மூன்று நற்குணங்கள் சந்திரசேகர் ராவிடம் உள்ளதாக கூறியுள்ளார். இப்படி உருக்கமாக, நெகிழ்வாக நடைபெற்ற நிகழ்வை அடுத்து சிறப்பு விமானம் மூலம் நரசிம்மனை சென்னைக்கு வழியனுப்பி வைத்தது தெலுங்கானா அரசு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications