திருப்பரங்குன்றம் விஷயத்தில் திமுகவின் அப்பட்டமான அரசியல் மிரட்டல் இது! பாய்ந்து வந்த பவன் கல்யாண்!
ஹைதராபாத்: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி எம்பிக்கள், பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவர மனு கொடுத்திருக்கின்றனர். இதற்கு ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். திமுக மற்றும் இந்தியா கூட்டணியின் இந்நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
"சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதியையோ, சமீபத்தில் விஷ்ணு குறித்து இழிவான கருத்தை பேசிய முன்னாள் தலைமை நீதிபதியையோ பதவி நீக்கம் செய்ய குரல் எழவில்லை. ஆனால் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி குறிவைக்கப்படுகிறார். திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி அரசியலமைப்பை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். இது அப்பட்டமான அரசியல் மிரட்டல்" என்று பவன் கல்யாண் விமர்சித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக தீபம் ஏற்றி வரும், உச்சிப் பிள்ளையார் தீப மண்டபத்தில் இந்த ஆண்டு கார்த்திகை தீப நாளன்று தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால், மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடின. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், டிச.1ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில், டிச.3ம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் நிலையில் மனு தாரர் கேட்ட தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
பிரச்சனையே அங்குதான் வெடித்தது. தர்காவை மலை மீது இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று எச்.ராஜா உள்ளிட்ட பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில், தர்கா பக்கத்தில் இருக்கும் தூணில் தீபம் ஏற்ற கோருவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என ஜனநாயக அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இப்படி இருக்கையில் டிச.3ம் தேதி வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் தீப தூணில், தீபம் ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் நாங்கள் கேட்ட தூணில் தீபம் ஏற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறி மனு தாரர் மீண்டும் டிச.3ம் தேதி நீதிமன்றத்தை நாட, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபம் ஏற்ற வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டார். இதற்கிடையில் திருப்பரங்குன்றம் மலைக்கு கீழே கலவரம் வெடித்தது.
இந்நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மதச்சார்பற்ற நடைமுறையை பின்பற்றவில்லை என்று கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று 100க்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவர, நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் பவன் கல்யாண் தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி











Click it and Unblock the Notifications